tamilnadu

img

தன்னிகரற்ற தலைவர் தோழர் எம்என்எஸ் - கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பின ரும், தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலாளரும், தமிழகம் அறிந்த மார்க்சிய ஆசிரியர்களில் ஒருவருமான தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன்  அவர்கள்  மே 1 ஞாயிறு இரவு 10.45 மணிக்கு மதுரையில் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்ற துயரச் செய்தி நம்மைத் தாக்கி,  ஒரு மாத காலம் கடந்துவிட்டது என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை. எம்.என்.எஸ். மறைவு  அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கட்சித்தோழர்கள் அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டது. அவரது மறைவால் ஏற்பட்டுள்ள  காயத்திற்கு  காலம்தான் மருந்து என நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டுவிட்டது.

தமது 65 ஆண்டுகால வாழ்வில் 45 ஆண்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காகவே ஒப்புக்கொடுத்தவர் அவர். 17.5.1957 அன்று பிறந்த தோழர் வெங்கட்டராமன், ம.ரெட்டியபட்டியில் பள்ளிப்  படிப்பையும், கோவில்பட்டியில் பி.யூ.சி., தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பி.எஸ்.சி., மண்ணியல் பட்டப்படிப்பையும் படித்தவர். இடதுசாரி இயக்கத்தின்பால்  ஈர்க்கப்பட்டு, இந்திய மாணவர் சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு மாணவப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர். 

1981-82 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அருப்புக்கோட்டை தாலுகா செயலாளராக செயல்பட்ட அவர், பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக பல்லாண்டு காலம் செயலாற்றி விவசாயிகளின் நலனுக்காக ஏரா ளமான போராட்டங்களில் முன்னின்ற மகத்தான தோழர். தோழர்கள் எஸ்.ஏ.பெருமாள், பி.சீனிவாசன் போன்ற கம்யூனிஸ்ட் முன்னோடிகளுடன் இணைந்து, விருதுநகர் மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்த பன்  முக நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர், 1994ஆம் ஆண்டு கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று 2001ஆம் ஆண்டு வரை திறம்பட செயலாற்றியவர். விருதுநகர் மாவட்ட உழைப்பாளி மக்களிடம் வீடுவீடாக நிதி திரட்டுவதிலும், அந்த நிதியைக் கொண்டே  கட்சியின் இயக்கங்களை நடத்துவதிலும்  தமி ழகக் கட்சிக்கே முன்னுதாரணமாக செயல்பட்ட வர் என்றால் மிகையல்ல.

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நலன் காக்கவும், விவசாயிகள், நெசவுத் தொழி லாளர் நலன் காக்கவும் எண்ணற்ற போராட்டங்க ளின் தளகர்த்தராக விளங்கியவர். பெண்களின் பிரச்சனைகளிலும், பெண்ணுரிமைக்கான போராட்டங்களிலும் உரிய வியூகங்கள் வகுத்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செயலாற்றியவர். விருதுநகர் மாவட்டத்தில் 1990களில் அறிவொளி இயக்கம் மாபெரும் மக்கள் இயக்க மாக உருவானபோது அறிவொளி இயக்கத்துட னும் அறிவியல் இயக்கத்துடனும் மிக நெருக்க மான உறவை மேற்கொண்டு அதில் கிடைத்த தொடர்புகளை கட்சி இயக்கங்களுக்கான வளர்ச்சிக்கு பயன்படுத்துவதிலும் வெற்றி பெற்றவர்.  இளைய தலைமுறையினரோடும், எழுத்தா ளர்கள் மற்றும் கலைஞர்களோடும் நெருக்க மான உறவைப் பேணி வந்தார். தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரம், இலக்கியம், இசை உள் ளிட்டவற்றில்  மிகுந்த ஈடுபாடும் ஞானமும் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் உள்ள அம்சங்களை வர்க்கக் கண்ணோட்டத்தோடு மார்க்சியக் கண்ணோட்டத்தோடு அணுகு வதில் தனித்திறன் கொண்டவர். தமிழ்ச் சமூ கத்தின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள்; சங்க காலத்திலிருந்து பின்னர் பவுத்தம், சமணம் ஆகியவற்றின் பரவல் உள் ளிட்ட வளர்ச்சிப் போக்குகள் ஏற்படுத்திய தாக்  கங்கள் குறித்து தெளிவான புரிதல் கொண்டவர் தோழர் எம்.என்.எஸ். 

அதேபோல சாதியத்தின் தோற்றம், சாதி யத்தை அணுகும் முறை ஆகியவை பற்றியும் தெளிவான சிந்தனையும் பார்வையும் கொண்ட வர். மார்க்சிய தத்துவத்தை பலரும் படித்திருக்கி றார்கள். ஆனால் மார்க்சிய கண்ணோட்டத்தை அந்தந்த மண்ணின் தன்மைக்கேற்ப வளர்ப்ப தில், மார்க்சியத் தத்துவத்தைப் பொருத்துவதில் அனைவரும் வெல்வது இல்லை. அதில் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் நிபுணத்துவம் பெற்றவர் என்றால் மிகையல்ல. எதையும் தீர்க்க மாக ஆய்வுசெய்து, இதுதான் சரியானது என்று  அவரே ஒரு சொந்த முடிவுக்கு வராமல் வெளியில்  பேசமாட்டார்; எதையும் தெரிந்து கொள்ளாமல்,  ஆய்வு செய்யாமல் பேசும் வழக்கம் அவரிடம் அறவே இருந்ததில்லை. அதனால்தான் அவர் மீது கட்சியின் அகில இந்திய தலைவர்களும் கூட ஈர்ப்புடன் இருந்து வந்தனர். இலக்கியவாதிகள், கலைஞர்கள், பேராசிரி யர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள்  உள்ளிட்ட பலருடனும் நல்ல பரிச்சயம் உண்டு  என்பது குறிப்பிடத்தக்கது. தான் கற்றுக் கொண்  டது மட்டுமல்ல, இவர்களிடமிருந்தும் தரவுகளை சேகரித்து அதைப் பயன்படுத்துவார். அவர் களோடு நல்ல உறவை பேணுவார்.

கட்சி வகுப்புகளிலும், பேரவைக் கூட்டங்களி லும், கட்சி முடிவுகளையும் தத்துவப் பின்னணி யோடு மிகச்சிறப்பாக விளக்குகின்ற ஆற்றல்  கொண்டவர். அனைவரிடமும் மிக எளிமையாக  பழகக் கூடியவர். தன்னை முன்னிறுத்தாமல், எப்போதும் கட்சியையே முன்னிறுத்துபவர்.  2001 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலச் செயற்  குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, தமது  இறுதி மூச்சு வரை கட்சி ஸ்தாபன அரசியல் பணி யை உயிரெனக் கருதி செயல்பட்டவர். தென்தமி ழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி  ஸ்தாபன பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார்.  தேர்தல் காலங்களில் மிக நுட்பமாக திட்டமிட்டு  வியூகங்களை வகுப்பதில் வல்லவர்.  தீக்கதிர் நாளிதழின் வளர்ச்சிக்கு தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் ஆற்றிய பங்கு மகத்தானது. ஆறு ஆண்டுகாலம் தீக்கதிர் ஆசிரி யர் குழு பொறுப்பாளராகவும், பின்னர் தீக்கதிர்  வெளியீட்டாளராகவும், முதன்மைப் பொது மேலாளராகவும் செயலாற்றி வந்தார். கொரோனா காலத்திற்கு பிந்தைய கடினமான சூழலை தீக்கதிர் நாளிதழ் எதிர்கொண்ட நிலையில், அதை நிலைநிறுத்துவதற்கு திட்டங்கள் வகுத்து செயல்படுத்த துவங்கியிருந்தார். இந்நிலை யில்தான் அவரது அகால மரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தீக்கதிர் நாளிதழுக் கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக வந்து விட்டது.         

அவரது மரணச்செய்தி நம்மை மட்டுமல்ல, கட்சியின் பொதுச் செயலாளரையும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்  அவர்களையும் உலுக்கிவிட்டது. கட்சியின் மாநிலச் செயற்குழுவில் தோழர் எம்என்எஸ்சின் நுட்பமான விவாதத்தை, அறிவுக்கூர்மையை  நேரில் பார்த்தவர்கள் அவர்கள். தகவல் அறிந் ததும் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் வெளிப்  படுத்தினார்கள்.  “தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அவர்களது திடீர் மறைவுச் செய்தி மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது நமது  கட்சிக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு ஆகும். தோழர் எம்.என்.எஸ், மக்களின் புரட்சிகர போராட்டங் களை தொடர்ந்து முனனெடுத்துச் செல்வதில் பல பத்தாண்டு காலம் செயலூக்கம் மிக்க  பங்கினை ஆற்றியிருக்கிறார். அவர்,ஒரு சிறந்த அமைப்பாளர், அவருக்கு அளிக்கப்பட்ட பல் வேறு பொறுப்புகளை மிகவும் திறம்பட நிறை வேற்றினார்”  என்று பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி நம்மை தொடர்பு கொண்டு இத யப்பூர்வமான இரங்கலை தெரிவித்தார்.

அதேபோல தோழர் பிரகாஷ் காரத் அவர் கள், “தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் அவர்கள் திடீரென, எதிர்பாரா விதமாக நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். தோழர்  எம்.என்.எஸ். கட்சியின் ஒரு தன்னிகரற்ற மற் றும் அர்ப்பணிப்புமிக்க தலைவர் ஆவார். கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் என்ற  அடிப்படையில் அவர் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றி வந்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்  கிய அனுபவத்தை பெற்றுள்ள அவர் ஒரு சிறந்த அமைப்பாளர் ஆவார். அவரது கருத்துக்கள், தெளிவாகவும் செறிவாகவும் கூர்மையான அர சியல் உணர்வுடனும் கூடியதாக வெளிப்படும். அவரது பங்களிப்பு மிக அதிகமாக தேவைப்படு கிற இந்த தருணத்தில், அவரது மறைவு கட்சிக்கு ஒரு பெரிய இழப்பு ஆகும்” என்று குறிப்பிட்டி ருந்தார். 

அவர்கள் குறிப்பிட்டதைப் போல தோழர் எம்என்எஸ் அவர்கள் ஒரு தன்னிகரற்ற தலைவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எம்என்எஸ் மனைவி பத்மினி, மகன் சூர்யா  உள்ளிட்ட குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி என்றைக்கும் பக்கபலமாக, உறு துணையாக இருக்கும். அவரது வாழ்க்கையை ஒரு படிப்பினையாக, பாடமாக எடுத்துக் கொண்டு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியங் களை முன்னெடுத்துச் செல்வோம்!