tamilnadu

img

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில நிர்வாகிகளுடன் சந்திப்பு

தென்காசி, அக் .12 தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட கிளை சார்பில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வசித்து வரும் முன்னாள்மாநில பொருளாளரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான  புளியங்குடி முத்தையா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர்  போத்திலிங்கம் ஆகியோரை மரியாதை நிமித்தமாக முன்னாள் மாநிலத் தலைவர் கண்ணன்  தலைமையில் செவ்வாயன்று சந்தித்து வாழ்த்துகள் பெறப்பட்டது. கடந்த காலங்களில் சங்க செயல்பாடுகளில் அவர்களின் பங்களிப்புகள் பற்றியும், தற்போது சங்க நடவடிக்கைகள் பற்றியும் ,சங்கத்தை இன்னும் எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் என்பது பற்றியும் நீண்ட நேரம் விவாதித்து ஆலோசனை வழங்கினார்கள். இந்நிகழ்வில் முன்னாள் மாநிலத் தலைவர்   .கண்ணன், மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்டசெயலாளர் மாரிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி, கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.