tamilnadu

img

தமிழ்நாடு அரசின் மருத்துவச் சுற்றுலா மாநாடு: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை,ஏப்.29- சென்னை கிண்டியில் தமிழ்நாடு அரசின் மருத்து வச் சுற்றுலா மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மருத்து வச் சுற்றுலாவை மேம்ப டுத்தும் வகையில், சிறப்பு மாநாடு சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப் பட்டும் என்று கடந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு  சார்பில் சென்னை கிண்டி யில் இரண்டு நாட்கள் மருத்துவச் சுற்றுலா மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஏப்.29) தொடங்கி வைத் தார். மேலும் மாநாட்டு புத்த கத்தையும் வெளியிட்டார். இந்தியாவிலேயே ஒரு  மாநிலத்தின் சார்பில் மருத்து வச் சுற்றுலாவுக்காக முதல் முறையாக தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் சவூதி  அரேபியா, மொரீஷியஸ்  உள்பட 20 நாடுகளிலிருந்து  70க்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறந்த மருத்து வர்கள், அரசு அலுவலர்கள்,  வெளிநாட்டு தூதரக அதி காரிகள், காப்பீட்டு நிறு வனங்களின் பிரதிநிதிக ளுடன் கலந்துரையாடல் மற்றும் பிற நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திறமை யான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. குறைந்த செலவில் தரமான மருத்து வச் சேவை வழங்கப்படு வதால் பல்வேறு வெளிநாடு களின் சுகாதாரத் தேவை களுக்கான நம்பகமான இடமாக தமிழ்நாடு உள்ளது.  இருப்பினும், இடைத்தர கர்களின் இடையூறுகளால் சிறந்த சேவையை பயனாளி கள் பெற முடியாத சூழல்  நிலவுகிறது. அதனை தவிர்க் கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகி றது. மாநாட்டின் துவக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.ராமச்சந்திரன், மா.சுப்பிர மணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ப. செந்தில்குமார், சந்திர மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.