tamilnadu

img

திண்டுக்கல்லில் சிபிஎம் நடத்திய மக்களுக்கான மருத்துவ முகாம்

திண்டுக்கல், அக்.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல்லில் மக்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.  இந்திய கம்யூனிச இயக்கத்தின் 103வது ஆண்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 59வது உதய தினம் கொண்டாடும் விதமாக  ஞாயிறன்று கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகமான தோழர் ஏ.பாலசுப்ரமணியம் நினைவகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த இந்நிகழ்ச்சியில் ஆயர்வேத சிறப்பு மருத்துவர்கள் தங்கம் பொன்னுச்சாமி, ஷேக்பரீத், சித்தா மருத்துவர் மகேந்திரன், ஹோமியோபதி மருத்துவர்கள் சாருவாகன், துரைமுருகன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம்,  சர்க்கரை சத்து,  மூட்டுவலி,  முதுகு தண்டுவட நோய்கள் என பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி,  மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம்,  மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஜி.ராணி,  திண்டுக்கல் ஒன்றியச்செயலாளர் ஆர்.சரத்குமார்,  கொடைக்கானல் ஒன்றியச்செயலாளர் ஜோசப்,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.வனஜா,   சி.பி.போஸ். முகேஷ்,  அழகர்ராஜா,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.