கிருஷ்ணகிரி, ஏப்.20- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதி ஆணவப் படுகொலைகளைக் கண் டித்தும், சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வலி யுறுத்தியும் மே 3 அன்று கிருஷ்ணகிரி யில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித் துள்ளார்.
ஆணவப் படுகொலைகள்
தமிழகத்தில் சாதி ஆணவப் படு கொலைகள், சாதிய ரீதியிலான கொடு மைகள் அதிகம் உள்ள மாவட்டங்க ளில் கிருஷ்ணகிரி இரண்டாவது இடத் தில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம் பட்டியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன் என்ற வாலிபரை பெண்ணின் தந்தை சங்கர் கடந்த மார்ச் 21 அன்று வெட்டிக் கொன்றார். ஏப்ரல் 15 அன்று ஊத்தங்கரை அரு ணபதி கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டதற்காக தண்ட பாணி என்பவர் தனது மகன் சுபாஷ், தனது தாயார் கண்ணம்மா, மருமகள் அனுசுயா ஆகியோரை அரிவாளால் வெட்டினார். இதில் மகனும் தாயா ரும் உயிரிழந்தனர். அனுசுயா உயி ருக்கு ஆபத்தான நிலையில் சேலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். (செய்தி -8)
கோவில் விழாவில் தாக்குதல்
ஏப்ரல் 13 அன்று அஞ்செட்டி வட்டம் கோட்டையூர் கிராமத்தில் காலகால மாக அடக்கப்பட்டு வந்த தலித் மக் களை மாரியம்மன் திருவிழா நாளில் வழக்கம்போல் சண்டை இழுத்து, நியாயம் கேட்க வந்த மூன்று பெண்கள், இரண்டு மாணவர்கள் உட்பட 12 க்கும் மேற்பட்டவர்களை சாதி ஆதிக்க சக்தி கள் அரிவாள், இரும்பு கம்பி, கட்டை களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இரண்டு பெண்கள், இரண்டு மாண வர்கள் உள்ளிட்ட 11 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோட்டையூர் கோவில் திருவிழா வில் சாதி ஆதிக்க சக்திகள் தலித் மக் களை தாக்கிய போது அங்கிருந்த காவல்துறையினர் தாக்கப்பட்ட வர்களையே மிரட்டியும் தாக்குதல் தொடுத்த சாதி ஆதிக்க சக்திகளை கண்டுகொள்ளாமலும் இருந்துள்ள னர். தாக்கியவர்கள் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய காவல்துறையிடம் வலியுறுத்திய போது காவல் துறை யினர் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீதும் பொய் வழக்கு போட்டுள்ளனர். தாக்கியவர்களில் முக்கிய குற்றவாளி கள் யாரையும் கைது செய்யாமல், தாக் கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரலிங்காவை மருத்துவமனையி லேயே கைது செய்து அழைத்துச் சென் றுள்ளனர்.
மாவட்ட காவல்துறையின் இது போன்ற செயல்கள் காவல் துறையினர் சாதிவெறி சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு கடும் கண்ட னத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்று கிருஷ்ணகிரியில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாதி ஆணவப்படுகொலைகள், சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக உட னடியாக சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி சாதி ஆணவ படுகொலைகள், வன்கொடு மைகளை எதிர்க்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் திரட்டி மே 3 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறி னார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக் கும் தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு பொருந்தும் என்ற சட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது” என்றார். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் சுமார் ரூ.2500 கோடி ஊழல் முறை கேடுகளில் பாஜக கட்சியின் நிர்வாகி கள் பலர் சிக்கியுள்ளனர். இதுகுறித்து பேச மறுக்கும் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார் பட்டி யல் என்று கூறி சொத்து பட்டியலை காண்பிப்பது அரைவேக்காட்டுத்தனம் என்றும் விமர்சித்தார்.