tamilnadu

img

கொரோனா நிவாரணமாக ரூ.7500 வழங்க கோரி திண்டுக்கல்லில் மாதர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜுன் 2- கொரோனா நிவாரணமாக ரூ.7500 வழங்க வேண்டும், சுய உதவிக்குழுக்களுக்கு வட்டி யில்லா கடன் வழங்க வேண் டும், வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலி யுறுத்தி திண்டுக்கல் மாவட்டத் தில் திங்களன்று மாதர் சங்கம் சார்பாக 50 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

திண்டுக்கல் நகரில் 11 இடங் களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. ஆர்ப்பாட்டங்களில் மாவட்டத் தலைவர் எம்.ஜானகி, நகரச்செயலாளர் ராஜேஸ்வரி, நகரத்தலைவர் திலகவதி. ஆகி யோர் பங்கேற்றனர். பழனி நக ரத்தில் 2 மையங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் தலைவர் பூமதி, பொருளாளர் ராக்கம்மாள், பங்கேற்றனர். பழனி ஒன்றியத்தில் 3 மைங்க ளில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. ஒன்றியச்செயலாளர் கௌரி, ஒன்றியத்தலைவர் கல்பனா, துணைத்தலைவர் பேச்சியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர். ரெட்டியார்சத்தி ரத்தில் 5 மையங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்டப் பொருளாளர் கவிதா, ஒன்றியத்தலைவர் மணி மேகலை, ஒன்றியக்குழு உறுப் பினர் பொன்னழகி. ஒன்றியக் கவுன்சிலர் அமுதா உள்ளிட் டோர் பங்கேற்றனர். 

நத்தத்தில் 5 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. மாவட்டச் செயலா ளர் ராணி, ஒன்றியச் செயலா ளர் சுமதி, ஒன்றியத்தலைவர் லீலா, பொருளாளர் லில்லி புஷ்பம், துணைச்செயலாளர் நாகவள்ளி, ஆகியோர் பங் கேற்றனர். சாணார்பட்டி ஒன்றி யத்தில் 3 மையங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. ஒன் றியச் செயலாளர் பாப்பாத்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகாம்மாள்,ராசம்மாள் ஆகி யோர் பங்கேற்றனர். வடமதுரை குரும்பபட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றி யத்தலைவர் அங்குலட்சுமி, ஒன் றியக்குழு உறுப்பினர் சரிதா குமாரி ஆகியோர் பங்கேற்ற னர். ஆத்தூர் ஒன்றியத்தில் 5 மையங்களில் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. மாநிலக் குழு உறுப்பினர் வனஜா, உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.