கரூரில் மாதர் சங்கம் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் மாவட்ட சிறப்பு பேரவை கரூர் சுங்ககேட் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகலா தலைமை வகித்தார். கரூர் ஒன்றியச் செயலாளர் சுமதி, புகளூர் நகராட்சி மன்ற உறுப்பினர் இந்துமதி மாவட்டத்தில் நடைபெற்ற பணிகள் குறித்துப் பேசினர். மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் லெட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் பவித்ரா ஆகியோர் சிறப்புரையாற்றினர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர் பதிவுகள் கரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. கரூர் ஒன்றியக் குழு சார்பில் 750, தோகைமலை ஒன்றியக் குழு சார்பாக 250, குளித்தலை 200 என மொத்தம் 1200 உறுப்பி னர்களுக்கான சந்தா மற்றும் கரூர் ஒன்றியக்குழு சார்பில் ‘மாதர் சிந்தனை’ மாத இதழ் 10-க்கான ஆண்டு சந்தா மாநில நிர்வாகிகளிடம் வழங்கப் பட்டது.
மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தி யதில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு மாதர் சங்கத்தின் சார்பில், மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.