tamilnadu

img

ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை குடங்களுடன் மாதர் சங்கம் போராட்டம்

புதுக்கோட்டை, டிச.6 - குடிநீர் வழங்காததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புதன்கிழமை போராட்டம் நடத்தினர். திருவரங்குளம் ஒன்றியம் கோவிலூர் கிராமத்திற்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் வழங்கப்படவில்லையாம். இதனைத் தொடர்ந்து உடனடி யாக குடிநீர் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் காலிக் குடங்களு டன் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியப் பொருளாளர் நதியா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, ஒன்றியத் தலை வர் வி.கலைச்செல்வி, துணைச் செய லாளர் கோமதி ஆகியோர் பேசினர். போராட்டத்தைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி கள், இரண்டு நாட்களில் குடிநீர்  கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொட ர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.