விருதுநகர், மார்ச் 11- திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மற் றும் தொண்டர்கள் மீதும் அவர்களின் வீடுகளையும் பாஜக குண்டர்கள் கொடூர மாக தாக்கி வருவதை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சாத்தூரில் நடைபெற்ற போராட்டத்திதற்கு நகர் செயலாளர் பெத்தராஜ், ஒன்றிய செயலாளர் எஸ். சரோஜா ஆகியோர் தலை மையேற்றனர். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.விஜயகுமார், எம்.ஜெயபாரத் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். அருப்புக்கோட்டையில் நகரச் செயலாளர் எஸ்.காத்தமுத்து தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.தாமஸ் துவக்கி வைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.முருகன் கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எஸ்.பூங்கோதை, பி. அன்புச்செல்வன், ஏ.அம் மாசி, எம்.கணேசன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். சிவகாசியில் நகர் செய லாளர் ஆர்.சுரேஷ்குமார் தலைமையில் ஒன்றிய செய லாளர் பி.பாலசுப்பிரமணி யன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.முருகன் கண்டன உரையாற்றினார்.
மதுரை
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்கு தலை நடத்தும் பாஜக குண் டர்களைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மேற்கு - 2 ஆம் பகுதிக்குழு சார்பில் ஜீவாநகர் - 1 வது தெரு சந்திப்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பகுதிக் குழு உறுப்பினர் எம். முக மது செரிப், ஆர். சக்திவேல், எஸ். ஆர். பாலாஜி ஆகி யோர் தலைமை வகித்தனர். கிளைச்செயலாளர்கள் ஆர். எம். பாபு, கே. கதிரேசன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.கே. பொன்னு தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். பாலசுப்பிர மணியன், பகுதிக்குழு செய லாளர் ஏ. எஸ். செந்தில் குமார், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் ஆகி யோர் உரையாற்றினர். திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் நக ரச்செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சுந்தரபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் திருமலை, ஜெயக் குமார், ஜோதிலட்சுமி ஆகி யோர் பேசினர். திருவில்லி புத்தூர் ஒன்றிய செயலாளர் சசிகுமார், வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் பெனரி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.