tamilnadu

img

‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு விழா

‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் கலைஞர்கள், களப்போராளிகளுக்கு செவ்வாயன்று (ஜன.4) சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரைப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், கலை இயக்குநர் கதிர், இசையமைப்பாளர் சேன் ரோல்டன், கலைஞர்கள் மணிகண்டன், தமிழரசன், பவாசெல்லத்துரை, இரா.காளீஸ்வரன், களப்போராளிகள் பார்வதி ராஜாகண்ணு, முதனை ஆர்.கோவிந்தன், ஆர்.ராஜ்மோகன், வழக்கறிஞர் அ.சந்திரசேகரன் ஆகியோரை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். நிகழ்வுகளை மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஒருங்கிணைத்தார்.

இந்த நிகழ்விற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் தலைமை தாங்கினார்.மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வரவேற்றார். மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.லாசர், எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், டி.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து நன்றி கூறினார்.