திருச்சிராப்பள்ளி, பிப்.17- திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மருங்காபுரி வட்டக்குழு சார்பில் கட்சி நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் வியாழனன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு மருங்கா புரி வட்டச் செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாநிலச் செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன், புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக வட்டக்குழு உறுப்பினர் அண்ணாதுரை வரவேற்றார். கட்சி நிதியை மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்ராம லிங்கத்திடம் வழங்கினர். கூட்டத்தில் பொன்னம் பட்டி பேரூராட்சி பகுதி மக்க ளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை வழங்க வேண்டும், 100 நாள் பணியாளர்களை விவசாய பணிகளில் ஈடுபடுத்த வேண்டும், மருங்காபுரி பகுதிக்கு காவேரி நீரை குழாய் மூலம் விவசாயத் திற்கு கொண்டு வரும் திட்டத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த பட்டன.