மதுரை, பிப்.12- முதலமைச்சர், அமைச்சர்கள், உயரதி காரிகள், ஆட்சியர்களின் அறிவிப்புகள், சட்டமன்ற முக்கிய உரைகள் ஆகியவை சைகை மொழியுடன் வெளிவர வேண்டு மென வலியுறுத்தி மார்ச் 1- அன்று சென்னை எழிலகம் முன்பு காது கேளாத-பேச முடி யாத மாற்றுத் திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் செவித்திறன் மாற்றுத் திற னாளிகள் பங்கேற்ற மாநில அளவிலான சிறப்பு கிளை அமைப்புக் கூட்டம் ஞாயி றன்று மதுரையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊனமுற்றவர்களுக்கான தேசிய மேடையின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மாற்றுத் திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்க மாநிலப் பொதுச் செயலா ளர் பி.ஜான்சி ராணி, மதுரை துணை மேயர் டி.நாகராஜ், திண்டுக்கல் மாவட்டச் செயலா ளர் பகத்சிங், மாமன்ற உறுப்பினர் டி.குமர வேல், மதுரை மாநகர் மாவட்டச் செயலா ளர் ஏ.பாலமுருகன், மாவட்டத் தலைவர் பி. வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செவித்திறன் பாதித்தோருக்கான மாநில சிறப்புக் கிளையின் தலைவராக பி.ஜீவா, செயலாளராக எம்.சொர்ணவேல், பொரு ளாளராக சுதா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் உரி மைகள் சட்ட விதிகளின்படி முதலமைச்சர், அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருடைய அறிவிப்பு கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் சட்ட மன்றத்தின் முக்கிய உரைகள் செவித்திறன் பாதித்தோருக்கும் சென்றடைய செய்தி மொழி பெயர்ப்பு வசதி செய்து தர வேண்டும், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் ஒரு சதவீதத்தை செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதிப்படுத்த வேண்டும். சென்னை, சேலம் கோயம் புத்தூர், மதுரை தஞ்சாவூர், திருச்சிராப் பள்ளி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அரசுப் போட்டி தேர்வு களை சிறப்பாக எதிர்கொள்ள தங்கு வசதி யுடன் சைகை மொழிபெயர்ப்புடன் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த பயிற்சி மையங் களை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.