மலப்புறம் காவல்துறையில் வழக்குப் பதிவு
மலப்புறம், ஜுன் 6- மன்னார்காடில் வெடிபொ ருளை கடித்து காட்டுயானை உயிரிழந்த துயரத்தை யொட்டி மலப்புரம் மாவட்டம் மற்றும் முஸ்லீம் சமூகத்தி ற்கு எதிராக இனவாத மற்றும் ஆத்திரமூட்டும் பிரச்சாரம் நடத்தியதாக பாஜக எம்.பி. மேனகா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்க றிஞரான கே.ஆர்.சுபாஷ் சந்திரன் மாவட்ட காவ ல்துறை தலைவரிடம் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. மாவட்ட மக்களுக்கு எதிராக வேண்டுமென்றே ஆத்திரம் ஊட்டும் பொய்யை பரப்பியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் மக்கள் பெரும்பான் மையாக உள்ள மலப்புறம் மாவட்டம் ஜிகாதிகள் மற்றும் வன்முறையாளர்களின் மையமாக உள்ளது என்பது போல் மேனகா காந்தி பிரச்சாரம் செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்தியாவில் மிக அதிக அளவில் வன்முறைகள் நடக்கும் மாவட்டமே மலப்பு றம் எனவும், தேசிய அள வில் குற்றச் செயல்களில் மலப்பறம் மாவட்டம் முன்னி லையில் இருக்க முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளதே காரணம் என பிரபல சமூக ஊடகங்களான டுவிட்டர், முகநூலில் பதிவு களை வெளியிட்ட விவ ரங்கள் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளன. மாவட்டத்துக்கு வெளியே நடந்த சம்பவத்தை வேண்டுமென்றே ஒரு சமூ கத்துக்கு எதிராக திருப்பி விடும் நோக்கத்துடன் பிரச்சா ரத்தை முதலில் துவக்கியவர் மேனகா காந்தியாவார். அதைத் தொடர்ந்து வட இந்தியாவில் ஏராளமான சமூக ஊடகங்களில் மலப்பு றம் மாவட்டத்துக்கு எதிராக கடும் வகுப்புவாத பிரச்சாரம் நடந்து வருகிறது. வேறு சில அமைப்புகளும் மேனகா காந்தி மீது புகார் அளித்துள் ளன. இத்தகைய ஆறு புகார் களின் மீது ஒரு முதல் தக வல் அறிக்கை தயாரித்து வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.