tamilnadu

img

தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவிடத்தில் மலரஞ்சலி

நாகர்கோவில், பிப்.8- கன்னியாகுமரி  மாவட்  டத்தின் ஸ்தாபக தலைவர் களில் ஒருவரும் உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவ ருமான  தோழர். ஜே.ஹேமச்  சந்திரன் அவர்களின் 15 ஆவது நினைவு தினமான புதன்கிழமையன்று காலை  10 மணி அளவில் மாத்தூரில்  உள்ள அவரது நினைவிடத் தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்  குழு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், எஸ்.நூர்முக மது, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், கட்சியின் மூத்த தோழர்கள் என பலர்  கலந்து கொண்டனர். சிஐடியு, விவசாய சங்கம்,  வாலிபர் சங்கம் உள்ளிட்ட  பல்வேறு தொழிற்சங்கங்  கள், வர்க்க வெகுஜன அமைப்பு  கள்  சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்  பட்டது. தோழர்.ஜே.ஹேமச்  சந்திரனின் சகோதரர்களான சதீஷ், ராஜசேகரன், ஹரி குமார் ஆகியோர்  அஞ்சலி செலுத்தினர்.  மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் கட்சி கிளை, வர்க்க வெகுஜன அமைப்புகள் சார்பில்  படம்  வைத்து மலரஞ்சலி செலுத்  தும் நிகழ்ச்சியும்  நடைபெற் றது.