tamilnadu

img

கணக்குத் தணிக்கைத் துறையில் மண்டல வாரியாக பணி நியமனங்களை மேற்கொள்க!

சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தல் சென்னை, நவ. 22 - கணக்குத் தணிக்கைத் துறையில் மண்டல வாரியாக பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தினார். அகில இந்திய கணக்குத் தணிக்கை ஊழியர் சங்கத்தின்  50 ஆவது மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதனை யொட்டி வெள்ளியன்று (நவ.22) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கணக்குத் தணிக்கை துறை அலுவலகத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் கி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சு.வெங்கடேசன் எம்.பி., பேசியதன் சுருக்கம் வருமாறு: ஒன்றிய ஆட்சியில் பல துறைகள்  தனித்தன்மையை இழந்து வரு கின்றன. ஆனால் தணிக்கைத்துறை தனது தனித் தன்மையை இழக்கா மல் உள்ளது. பொதுச் சொத்துக்கள், வளங்களை காக்கும் கோட்டை யாக இந்த துறை விளங்குகிறது. தணிக்கைத்துறை உள்ளிட்ட பல துறைகளில் மண்டல வாரியாக பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. மண்டல வாரியாக பணி  நியமனங்கள் சமூகத்திற்கும், ஜன நாயகத்திற்கும் நல்லது. அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள உரிமைகள் எதுவும் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழி யர்களுக்கு கிடைப்பதில்லை. இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஏஐ தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில், துறை கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்க வேண்டி உள்ளது. எல்ஐசி யைப் பற்றி நிர்வாகம் பேசியதை விட, அதன் ஊழியர்களும், சங்கங் களும் அதிகளவு பேசி துறையை பாதுகாத்து வருகின்றனர். நிர்வாகங்கள் உத்தரவின்பேரில் செயல்படுபவை. சங்கங்கள் உணர்வு கள், மனித மதிப்புகள், லட்சியங்களின் அடிப்படையில் செயல்படுபவை. எனவே, அமைப்பை வலுப்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.