மதுரை, மே 7- ரூ .46.78 கோடி மதிப்பிலான மதுபானத்தை விற்பனை செய்து தமிழகத்திலேயே மதுரை "சாதனை" படைத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் 44 நாட்களாக அடைக்கப்பட்டிருந்தன. தமி ழக அரசுக்கு டாஸ்மாக் கடை யை திறப்பதில் ஆர்வம் இல்லையென்றாலும் குடி மகன்கள் ஆந்திரா, கேரளா விற்கு சென்றுவிடுவதைத் தடுப்பதற்காக டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளதாக தமி ழக அரசு வியாக்கியானம் செய்துவருகிறது. மதுரையில் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் இரண்டு போலீசார் பாது காப்பளிக்க வியாழனன்று விற்பனை கனஜோராக தொ டங்கி நடைபெற்றது. குறிப்பாக வயது வாரியாக சரக்கு பெற்றுச் செல்வதற்கு அரசே நேரம் ஒதுக்கீடு செய்து அறிவித்திருந்தது. அரசு சாராய விற்பனை எவ்வளவு என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் மதுரை மண்டலம் ரூ.46.78 கோடி ரூபாய்க்கு மதுவை விற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளது.
தினம்தோறும் மதுரை தீக்கதிர் அலுவலகம் அரு கில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர், காவலர்கள் தலை மையில் ஒரு பெரும்படையே அமர்ந்திருக்கும். அவ்வ ப்போது அவர்கள் இரு சக்கர வாகனங்களை சோதனை செய்வர். பலர் மீதுவழக்கும் பதிவு செய்து தமிழகத்திற்கு வருமானத்தை ஈட்டித் தந்த னர். டாஸ்மாக் கடை திறக்கப் பட்டபின் தீக்கதிர் அலுவ லகம் அருகிலிருந்த மொத்த போலீஸ் படையையும் காணவில்லை. இரு சக்கர வாகனத் தணிக்கையை விட "குடிமகன்களை" பாதுகாப்பது தான் முக்கியம் என உயரதிகா ரிகளிடமிருந்து வந்த உத்தர வைத் தொடர்ந்து அவர்கள் "டாஸ்மாக் கடை" பாதுகா ப்பிற்கு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசிற்கு "குடிமக்கள்" முக்கியமா? "குடி மகன்கள்" முக்கியமா? என்றால் "குடி குடியைக் கெடுக்கும்" எனக்கூறும் அர சுக்கு "குடிமகன்கள்" தான் முக்கியம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தமிழகத்தில் கடை திறக்கப்பட்ட வியாழனன்று மட்டும் ரூ. 172.59 கோடி மதிப்புள்ள மதுபானங்களை விற்பனை செய்யபட்டுள்ளது. பொங்கல், தீபாவளி மற்றும் புத்தாண்டுகளில் பொதுவாக மாநில அளவில் மது விற்பனை ஒரே நாளில் ரூ.120 கோடி முதல் 200 கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.