tamilnadu

img

மாநில நீச்சல் போட்டி 4 பதக்கங்கள் வென்று மதுரை மாணவி சாதனை

மதுரை, ஜூலை 17-   மாநில நீச்சல் போட்டியில் 4 பதக்கங்களை வென்று  மதுரை மாணவி  பி.ரோஷினி சாதனை படைத்துள்ளார். அதன்மூலம் தேசியப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம்  சார்பாக ஜூலை 12,13,14 ஆகிய தேதி களில் சப் ஜூனியர்,ஜூனியர்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள அக்வாடிக் காம்ளக்சில் நடைபெற்றது.அனைத்து மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண் டனர்.இதில் மதுரை லீசார்ட்லீயர் பள்ளி மாணவி பி. ரோஷினி மூன்று தங்கம்,ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங் களை வென்றார். 200 மீ பட்டர் பிளே போட்டியில் தங்கம் (2.31 வினாடி),100 மீ பட்டர்பிளே போட்டி யில் தங்கம் (1.08வினாடி),200 மீ ப்ரிஸ்டையில் போட்டியில் தங்கம் (2.16 வினாடி),100 மீ ப்ரிஸ்டையில் போட்டி யில் வெண்கலம்(1.04வினாடி) என பதக்கங்களை வென்றார். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நீச்சல் வீரர்கள் தேசிய நீச்சல் போட்டிக்கு தேர்வு பெறுவர்.அந்த வகையில் ஆகஸ்ட் 6 முதல்11 வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடை பெறும் தேசிய நீச்சல் போட்டிக்கு மாணவி ரோஷினி தேர்வாகி கலந்து கொள்கிறார். சாதனை படைத்த  மாணவி ரோஷினியை தமிழ்நாடு மாநில நீச்சல்  சங்க துணைத்தலைவர் எம்.ஸ்டாலின் ஆரோக்கியராஜ், இணைச்செயலாளர் என்.கண்ணன், லீசார்ட்லீயர் பள்ளி தாளாளர் மைக்கேல் சார்ட்லீயர், பள்ளி முதல்வர் ஸ்ரீரேகா,  தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  (SDAT) பயிற்சியாளர்  சென்னை சதீஷ்,  மற்றும் மாணவ-மாணவியர்,  பெற்றோர்கள் பாராட்டி, வாழ்த்துக் களை தெரிவித்தனர்.