மதுரை, ஜன.9- “சங்கத் தமிழ் வளர்த்த மதுரை, ஸ்மார்ட் சிட்டி, உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திரு விழா, உலகப் புகழ் பெற்றது எனக் கூறப் படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, தமி ழகத்தின் அரசியல் தலைநகரம் என்றெல் லாம் வர்ணிக்கப்படும் மதுரையில் சுகா தாரம் இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. அதுவும் மதுரை பெரியார் பேருந்து நிலை யத்தில் அவ்வப்போது கழிவு நீர் பெருக் கெடுத்து ஓடும்” இதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் என்ன விதி விலக்கா என்ன...? வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழ மைகளில் மதுரை ஆட்சியர் அலுவலக வளா கத்தில் பல இடங்களில் குப்பைக் குவியல் களுக்குத் தீ வைக்கப்படுகிறது. நெகிழி பாட்டில்கள், பைகள் மற்றும் நெகிழிக் குடி நீர் பாட்டில்கள், மக்கும் குப்பை. மக்காத குப்பை எனப் பிரிக்கப்படாத கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் குப்பைத் தொட்டிகள் அதிகளவில் இல்லை.
இங்கு நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டுள்ள கழி வறை அருகில் தான் குப்பைகளுக்குத் தீ வைக்கப்படுகிறது. மற்றொருபுறத்தில் பல வாகனங்கள் ஆண்டுக் கணக்கில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. ஓரிரு லாரிகள் கிரானைட் கற் களோடு நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மருந்துக் கிடங்குக்கு அருகில் நிறுத்தப் பட்டுள்ள வாகனங்களைச் சுற்றி முட்புதர்கள் வளர்ந்து வாகனங்களைப் பாதுகாத்து வரு கின்றன. காலி மது பாட்டில்களுக்கும் பஞ்ச மில்லை. இது என்ன ஆட்சியர் அலுவலகம் தானா என்று கேள்வியெழுப்புவதில் தவ றில்லை. போதாக்குறைக்கு ஆட்சியர் அலுவல கத்தில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரி கின்றன. இது குறித்துக் கொட்டாம்பட்டியைச் சேர்ந்த வி.பேச்சியம்மாள் (65), கூறுகை யில், “நோயால் பாதிக்கப்பட்ட நாய்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது” என்றார். ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்
களுக்கு எந்த அலுவலகம் எந்த இடத்தில் செயல்படுகிறது என்பதை விளக்கப் பெயர்ப்பலகைகள் இல்லை. குறிப்பா கப் பெயர்ப்பலகை மூலம் அடையாளப் படுத்துவது வயதானவர்களுக்கு உதவி யாய் இருக்கும் என்றார் கள்ளந்திரியைச் சேர்ந்த என்.சேகர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தண்ணீர் குடிப்பதற்குப் போதுமான இயந்தி ரங்கள் நிறுவப்படவில்லை. வளாகத்தில் சாலைகள் தரமாகப் போடப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் மக்கள் முன் வைத்தனர். கேன்டீன் ஒன்றில் பணிபுரியும் எம்.ரபியா கூறுகையில், கழிவறை எங்கே இருக்கிறது என்று பல பெண்கள் என்னிடம் கேட்பது வழக்கம் இடம் குறித்துப் பல பெண்கள் தன்னிடம் தொடர்ந்து கேட்கின்ற னர். கேன்டீன் அருகே உள்ள கழிப்பறை பல மாதங்களாக மூடியே உள்ளது. இதனால் ஆண்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழிக் கின்றனர்” என்றார். அதிகாரி ஒருவர் கூறுகையில், “”ஆட்சி யர் அலுவலகக் கூடுதல் கட்டடத்தில், கூட்ட அரங்கிற்கு அருகில் உள்ள கழிவறையை, ஊழியர்கள் சுத்தம் செய்தாலும் துர்நாற்றம் குறையவில்லை” என்றார். மேலும் அவர் கூறுகையில், சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்களை வளாகத்தில் நிறுவுவது பணியாளர்களுக்கு மட்டுமல்ல, ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பெண்களுக்கும் பயனளிக்கும் என்றார், ஆட்சியர் எஸ்.அனீஷசேகர் கூறுகை யில், “ வளாகம் தூய்மைப்படுத்தப்படும். கழிவுகளை எரிப்பது தடுக்கப்படும். வளா கத்தை அனைத்து வகையிலும் பராமரிக்க உரிய கவனம் செலுத்தப்படும்” என்றார்.