மதுரை:
மதுரை ரயில்வே மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டுமென டிஆர்இயு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மதுரை கோட்ட டிஆர்இயு செயலாளர்இரா.சங்கரநாராயணன் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:-
கொரோனா தொற்று நோய் காலத்தில் ரயில்வே மருத்துவமனை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. திருநெல்வேலி, மற்றும் செங்கோட்டை மருத்துவ மையங்களில் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை தாயகமாக கொண்ட சித்த மருத்துவப் பிரிவை மதுரை ரயில்வே மருத்துவமனையிலும், திருநெல்வேலி மருத்துவமையத்திலும் தொடங்க மதுரைக் கோட்ட ரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும். குறிப்பாகதொற்று நோயை தீர்ப்பதில் சித்த மருத்துவம் மிகப்பெரும் பங்காற்றி உள்ளது. மருந்து மற்றும் மாத்திரைகள்(சூரணங்கள்) விலை மற்ற துறைகளை காட்டிலும்விலை குறைவானது. தென்னக ரயில்வேயில் சென்னையில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மதுரைரயில்வே மருத்துவமனையில் ஹோமியபதி மருத்துவப் பிரிவு வாரத்திற்கு ஐந்து நாட்கள் செயல்படுகிறது.சித்த மருத்துவத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் ரயில்வே ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்டும் மதுரைக் கோட்ட ரயில்வே நிர்வாகம் சித்த மருத்துவப்பிரிவை மதுரையிலும், திருநெல்வேலியிலும் தொடங்க வேண்டும்.