tamilnadu

img

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், பேரணிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்று காலத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை விதிக்க வேண்டும் வலியுறுத்தி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு போதிய கவனம் செலுத்தி, நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது.  எனவே அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், பேரணிகளுக்கு தடை விதிக்க முடியாது என்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதிப்பது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது  நிதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 
 

;