tamilnadu

img

எட்டு ஆண்டுகளில் நான்கு கட்சியைப் பார்த்த மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன்

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் மறை முக உறவு வைத்துள்ள அதிமுக  சார்பில் மதுரை தொகுதியில் டாக்டர் சரவணன் போட்டியிடு கிறார். டாக்டர் சரவணன் பெயரை எடப்பாடி பழனிசாமி புதனன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சரவணன் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். எட்டாண்டுகளில் நான்கு கட்சிகளில் பயணம் செய்துள்ளார். தற்போது அதிமுகவில் ஐக்கியமாகி யுள்ளார்.  2015-ஆம் ஆண்டு மதிமுகவில் மாவட்டச் செயலாளராகச் செயல்பட்ட பி.சரவணன் 2016-இல் திமுகவில் இணைந்தார். 2019-இல் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து சீட் கிடைக்காததால்  2021-இல் பாஜகவில் இணைந்தார். இணைந்த சில மணி நேரங்களிலேயே அவர் பாஜக சார்பில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் திமுகவின் கோ.தளபதியிடம் தோல்வியடைந்தார்.  கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லெட்சுமணனின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசி பாஜகவின் பராக்கிரமத்தை நிரூபித்தவர். செருப்பு வீச்சைத் தொடர்ந்து அன்றைக்கு நள்ளிரவே பழனிவேல் தியாகராஜனைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டார். பின்னர் அவர் பாஜகவிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். சிறிது காலம் அரசி யலுக்கு ‘ஓய்வு’ விட்டிருந்த அவர், தேர்தல் நெருங்கி யதையொட்டி திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தார். இப்படியாக அவர் அதிமுகவில் சீட் வாங்கி நிற்கிறார்.