tamilnadu

img

2 ஆயிரம் ரூபாய் செல்லாமல் போனது மோடி ஆட்சியும் செல்லாமல் போகும்

அவிநாசி, ஜூன் 19– 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இப்போது செல்லாமல் போனது. அதுபோல் இதை கொண்டுவந்த மோடி ஆட்சியும் செல்லாமல் போகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமுருகன்பூண்டி நகராட்சி கிளைகள் சார்பில்  அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயி றன்று நடைபெற்றது. சிபிஎம் நகர்மன்ற உறுப்பி னர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், திருமுருகன்பூண்டி நகர்மன்றத்தில் குடிநீர் குழாய் வழங்குவதில் நடைபெற்ற குளறுபடிகள், தூய்மை பணியை தனியார்மயம் ஆக்குவது, அதனுடைய அதி ருப்தியை மார்க்சிஸ்ட் கட்சியினர் வெளிப்படு த்தினர்.

தோழமையோடு சுட்டிக்காட்டி உள்ளோம்; நீங்களும் தோழமையோடு சரிசெய்ய வேண்டும். பொதுவாக ஒரு காலத்தில் தனியார் வேலையை விட அரசு வேலையைத்தான் நம்புவார்கள். அரசு வேலை என்றால் நிரந்தர  வேலை. தற்பொழுது அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தி உள்ளனர். இதில் குப்பையிலும் ஒரு கோஷம். “என் குப்பை என் பொறுப்பு; குப்பை அள்ளும் தொழிலாளிக்கு யார் பொறுப்பு”. கொரோனா காலத்தில் பிரதமர் மோடி தூய்மைப்பணி செய்தவர்களை கௌரவிக்க வேண்டும் என்று கூறினார். அப்பொழுது தூய்மைப்பணியாளர்கள் இந்த கௌரவம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம். தற்காலிகமாக இருக்கின்ற வேலையை நிரந்தரமாக்க வேண்டும் என்று கேட்டனர்.  ஜிஎஸ்டி வரி என்றால் கூட்ஸ் அண்ட் சர்வீஸ் டேக்ஸ் வரி என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் குஜராத் சர்வீஸ் டாக்ஸ் என்று மாறிவிட்டது. 2000 ரூபாய் நோட்டும், பிரதமரும் ஒன்று. ஏனென்றால் ஏழை கையில் என்றை க்கும் சிக்காது. எப்ப செல்லாமல் போகும் என்று அதுக்கே தெரியாது. உண்மையிலேயே 2000 ரூபாய் நோட்டு தற்பொழுது செல்லா மல் போயிருக்கிறது. இதைக்கொண்டு வந்த வருடைய ஆட்சி 2024 இல் செல்லாமல் போக வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அகண்ட பாரதம் என்று பெரிய படம் ஒன்று வைத்துள்ளனர். அதில் பார்த்தால் நேபாளம் உள்ளது. பர்மா உள்ளது. இதைப்பார்த்து பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் பழைய கனவு என்று கூறினார்கள். அந்த விழாவில் பிரதமர், கொஞ்சம் கொஞ்சமாக சிவில் சட்டத்தை கொண்டு வருவோம். மூத்தவர்களின் கனவை நினைவாக்குவோம் என்கிறார். 

திருப்பூரில் பணி செய்கிற வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் விருந்தினர் கள். பாஜகவைச் சேர்ந்தவர்கள் வடமாநில தொழிலாளியை உள்ளூர்காரர்கள் ஓட ஓட விரட்டுவதாக ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்தனர். இதில் பல தொழிலாளர்கள் வெளியே சென்று விட்டனர். இதனால் உள்ளூர் முதலாளி, வடமாநில தொழி லாளியிடம் போகாதே என்று பின்னாடி ஓடி னார். எதற்காக? உள்ளூர் முதலாளி வட மாநில தொழிலாளி மேல் வைக்கின்ற பாசம், கொடுக் கிற ஊதியத்தை வாங்கிக் கொள்கிறார்கள் சங்கம் வைப்பதில்லை என்பதால் தான். தனியார் என்றால் என்ன என்று தெரியுமா? ஒரிசாவில் ரயில் விபத்தில் பலரும் இறந்தார்கள், இறந்த அன்று விமான கட்டணம் குறைவு. அதற்கு அடுத்த தினமே விமான கட்டணம் அதிகமாக உயர்ந்தது. தனியாரிடம் கொடுத்ததின் காரணமாகத்தான் விமான கட்டணம் உயர்ந்தது. அதிமுக நண்பர்களை அன்போடு கேட்டுக்கொள் கிறேன். பாஜக உறவும் பாம்பின் நிழலும்  ஒன்றுதான். உங்கள் கட்சியைப் பிரித்து விட்டதே அவர்கள் தான். இப்பொழுது நடைபெற்றுக் கொண்டி ருக்கிற போராட்டம், ஜனநாயகத்திற்கான போராட்டம். கூட்டாட்சிக்கான போராட்டம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக திருப்பூரை பாதுகாக்க, திருப்பூர் தொழிலை பாதுகாக்க போராடுகிறது. 2024 இல் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். பாஜக என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல. ஆர்எஸ்எஸ்-சின் அர சியல் முகம்தான் பாஜக. இவ்வாறு அவர் கூறி னார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கராஜ், நந்தகோபால், ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் வெங்க டாசலம், ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர் தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உடுமலை துரையரசன் கலைக்குழு பாடல் அரங்கேற்றப்பட்டது.