கரூர், டிச. 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட 9வது மாநாடு டிசம்பர் 26, 27 தேதிகளில் தரகம்பட்டியில் நடைபெற்றது. மாநாட்டைத் துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் உரையாற்றி னார். மாநாட்டை நிறைவு செய்து மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ஸ்ரீதர் உரையாற்றி னார். மாநாட்டின் நிறைவில் கட்சியின் புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளராக எம். ஜோதிபாசு தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக கே.கந்தசாமி, ஜி. ஜீவானந்தம், பி.ராஜூ, கே. சக்திவேல், சி.முருகேசன், இரா.முத்துச்செல்வன், பி.ராமமூர்த்தி, சி.ஆர்.ராஜாமுகமது உள்ளிட்ட 28 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.
தீர்மானங்கள்
பருத்தி பதுக்கலைத் தடுத்து ஜவுளி ஏற்றுமதி தொழிலை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும், தரகம்பட்டியில் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டிடம் வேண்டும். தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கட்டமைப்பு வசதிகள் செய்து உரிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணி யாளர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல் பட நடவடிக்கை எடுக்கவேண்டும். கடவூர் தரகம்பட்டியில் புதிய நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், பாலவிடுதியில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி, கடவூர் ஒன்றியத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.