tamilnadu

img

ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்புத் தீர்மானத்துக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

ஸ்ரீநகர், அக்.19- ஜம்மு - காஷ்மீரின் மாநில அந் தஸ்தை மீட்டெடுக்க வலியுறுத்தி முதல்வர் உமர் அப்துல்லா தலைமை யிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு துணைநிலை ஆளு நர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித் துள்ளார். இதுகுறித்து ஜம்மு - காஷ்மீர் செய்தித் தொடர்பு அதிகாரி ஒருவர்  கூறும்போது, “முதல்வர் உமர் அப் துல்லா தலைமையில் வியாழக்கிழமை கூடிய அமைச்சரவை, ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்தை அதன்  அசல் தன்மையுடன் மீட்டெடுப்பதற் கான தீர்மானத்தை ஒருமனதாக நிறை வேற்றியது. அமைச்சரவை நிறைவேற் றிய இந்தத் தீர்மானத்துக்கு துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது என்பது, ஜம்மு - காஷ்மீர் மக்களின்  அடையாளத்தை, அதன் அரசியல மைப்பு உரிமைகளை மீட்டெடுப்பதற் கான நடைமுறையின் முதல் செயல் முறையாகும். மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் விவகாரத்தை பிரதமர் மோடி மற்றும்  ஒன்றிய அரசிடம் கொண்டு செல்வதற்  கான முழு உரிமையையும் அமைச்ச ரவை முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளத்தையும் மக்களின் அரசியலமைப்பு உரிமை யை பாதுகாப்பது புதிதாக தேர்ந்தெ டுக்கப்பட்டிருக்கும் அரசின் முக்கிய மான கொள்கையாகும். இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களை சந்  திக்க வரும் நாட்களில் முதல்வர்  தில்லிக்குச் செல்ல இருக்கிறார். நவம்பர் 4 அன்று ஸ்ரீநகரில் சட்டப்பேர வையைக் கூட்ட அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ளது. முதல் சட்டப்பேர வைக் கூட்டத்தில் துணைநிலை ஆளு நர் ஆற்றவேண்டிய உரையின் வரை வும் அமைச்சரவை முன்பு வைக்கப் பட்டுள்ளது. இது குறித்து குழு மேலும்  விவாதித்து பரிசீலிக்கும்” என்று அவர்  தெரிவித்தார்.