tamilnadu

img

அலங்காநல்லூரில் ஏழ்மையில் உள்ள தோழர்களுக்கு எல்ஐசி உதவி

அலங்காநல்லூர்
மதுரை புறநகர் மாவட்டம் அலங்காநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலங்காநல்லூர் ஒன்றியத்தில் ஏழ்மையில் உள்ள 15க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு  எல்ஐசி உதவியோடு தேனூர் ஏஞ்சல் ஹோம் அறக்கட்டளை மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலங்காநல்லூர் ஒன்றியக் குழுவும் இணைந்து 10 நாட்களுக்கு தேவையான  ரூ.1000 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில்  அறக்கட்டளையின்  சேர்ந்த எம்.ஆர்.சாந்தி, குரூஸ் மற்றும்  கட்சியின் அலங்காநல்லூர் ஒன்றியப்  பொறுப்பு செயலாளர் வி.உமாமகேஸ்வரன்,  கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆண்டிச்சாமி, மாற்று திறனாளிகள் சங்க அலங்கை ஒன்றியச் செயலாளர் தவமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

;