சென்னை, மே 12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது வழங்கப்படும் என்று விடுதலை சிறுத்தை கள் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக விசிக நிறுவனர் - தலை வர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அள வில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோ ருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளு மைகளுக்கு ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆத வன், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் அக்கட்சி வழங்கி வருகிறது. 2022ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்படுகிறது. இதன்படி, 2023ஆம் ஆண்டிற்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருது இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) அகில இந்திய பொதுச்செயலாளர் திபங் கர் பட்டாச்சார்யாவுக்கும், ‘பெரியார் ஒளி’ விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா வுக்கும் வழங்கப்படும். ‘காமராசர் கதிர்’ விருது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பா வுக்கும், ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது, தில்லி மாநில முன்னாள் அமைச்சர் இராஜேந்திரபால்கவுதமுக்கும், ‘மார்க்ஸ் மாமணி’ விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனுக்கும், ‘காயிதேமில்லத் பிறை’ விருது பெங்களூர் சட்டப் பல் கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் மோகன் கோபாலுக்கும், ‘செம்மொழி ஞாயிறு’ விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் வழங்கப் பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மே 28 அன்று சென்னையில் நடை பெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.