பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கடிதம்
நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்க 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத் தில் இதுகுறித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இதுகுறித்து கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பிரதமரை சந்தித்து கடிதம் அளித்து முறை யிடுவது என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டசபை யில் செவ்வாயன்று பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பின் போது பாதிக்கப்படும் மாநிலங்களின் உரி மைகளை மீட்டெடுத்திட, நியாய மான தொகுதி மறுசீரமைப்பை பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.,க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்றார். மேலும் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் புதனன்று (மார்ச் 26) கடிதம் அனுப்பப்படுகிறது. பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரம் வெளிநாடு செல்ல இருப்பதால், அதற்கு முன்னதாகவே இவர் களை சந்திப்பதற்கு அனுமதி கொடுப்பார்களா?