tamilnadu

காணொலிக் காட்சி மூலம் ஆஜராவதால் தொழில் ரீதியாக பாதிப்பு

சென்னை, ஜன.15- வழக்கு விசாரணைக்காக காணொலிக் காட்சி மூலம் ஆஜராவதால் தொழில்ரீதியாக வழக்க றிஞர்கள் சிரமத்துக்குள்ளாவதாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கோவை வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததை அடுத்து தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ள்ளது. மேலும், நீதிமன்றங்களில் மீண்டும் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில், கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (சிபிஏ) தலைவர் பி.ஆர்.அருள்மொழி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சிபிஏ செயற்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. அதில், காணொலிக் காட்சி மூலம் வழக்குகளில் ஆஜராவதால் தொழில்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும்பாலான வழக்கறீ ஞர்கள் சிரமங்களை எதிர்கொள்கின் ்றனர்.

காணொலிக் காட்சி மூலம் ஆஜராவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை பெரும்பா லான வழக்கறிஞர்களால் பின்பற்ற முடிவதில்லை. எனவே, மாவட்ட முதன்மை நீதிமன்றம், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் நடைபெறும் ஜாமீன் மனு விசாரணைக்காக நேரடி யாகவும், காணொலிக் காட்சி மூல மும் ஆஜராக கீழமை நீதிமன்ற வழக்க றிஞர்களை அனுமதிக்க வேண்டும். அதேபோல, ஜாமீன் மனு விசார ணைக்காக ஆஜாராகும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்களையும் நேரிலும், காணொலிக் காட்சி வாயி லாகவும் ஆஜராக அனுமதிக்க வேண் டும். ஜாமீன் மனுக்களைக் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் விசார ணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் குறைந்த பட்சம் தலா 10 பழைய வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து,

அதை சிறப்புப் பட்டியலிட்டு, அவற்றை முன்கூ ட்டியே வழக்கறிஞர்களுக்குத் தெரி விக்க வேண்டும். அந்த வழக்கு களில் வழக்காடிகளையும், வழக்கறி ஞர்களையும் விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்க வேண்டும். ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருதரப்பு வழக்க றிஞர்களும் கூட்டாக மனு செய்யும் ்போது, குறிப்பிட்ட தேதியில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் ்கொள்ள வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்களின் நலனை யும், தொடர்ந்து அவர்கள் வழக்கு களை நடத்த வேண்டும் என்பதையும் கருத்தில்கொண்டு, இந்தக் கோரி க்கைகள் குறித்து தாங்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.