tamilnadu

img

வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை தமிழில் வெளியிடுக!

மதுரை, மே 8-  வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோ தாவை தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் வெளியிட வேண்டும் என நாடா ளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் ராஜேந்திர அகர்வாலுக்கும், ஒன்றிய அமைச்சர் பூபேந் தர் யாதவிற்கும் கடிதம் மூலம் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலி யுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 29ஆம் தேதி வனப்பாதுகாப்பு சட்டம் 1980 ஐ திருத்து வதற்கான Forest (Conservation) Amendment Bill 2023 எனும் மசோதா அறி முகப்படுத்தப்பட்டது. காட்டையும் காட்டு வளங்களையும் வணிக நலன் கருதி தனி யாருக்குத் திறந்துவிடும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இம்மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அம்மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீல னைக்கு அனுப்பப்பட்டது.  இம்மசோதாவின் மீது மே 18ஆம் தேதிக் குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் ராஜேந்திர அகர்வால் எம்.பி.  அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே கருத்துத்  தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் அறி முகம் செய்யப்பட்ட மசோதாவும் தற்போது வரை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கப் பெறு கிறது.

மதுரை, மே 8-  வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோ தாவை தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் வெளியிட வேண்டும் என நாடா ளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் ராஜேந்திர அகர்வாலுக்கும், ஒன்றிய அமைச்சர் பூபேந் தர் யாதவிற்கும் கடிதம் மூலம் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலி யுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் 29ஆம் தேதி வனப்பாதுகாப்பு சட்டம் 1980 ஐ திருத்து வதற்கான Forest (Conservation) Amendment Bill 2023 எனும் மசோதா அறி முகப்படுத்தப்பட்டது. காட்டையும் காட்டு வளங்களையும் வணிக நலன் கருதி தனி யாருக்குத் திறந்துவிடும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இம்மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அம்மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீல னைக்கு அனுப்பப்பட்டது.  இம்மசோதாவின் மீது மே 18ஆம் தேதிக் குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் ராஜேந்திர அகர்வால் எம்.பி.  அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே கருத்துத்  தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் அறி முகம் செய்யப்பட்ட மசோதாவும் தற்போது வரை ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கப் பெறு கிறது.