மதுரை, பிப். 23- மதுரை நகரின் வளர்ச்சிக்கும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நானும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசனும் இணைந்து பணியாற்றுவோம் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச் சர் செல்லூர் கே.ராஜூ ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறினார். மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள மக்களவை உறுப்பினர் அலுவல கத்திற்கு ஞாயிறன்று வந்திருந்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. அவரை சு.வெங்கடேசன் எம்.பி., ஊழியர்கள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அமைச்சருக்கு ‘வேள்பாரி’ நாவலை சு.வெங்கடேசன் வழங்கினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடை பெற்றது. பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சு.வெங்கடேசன் எம்.பி., மதுரை யின் வளர்ச்சிக்குத் தேவையான பங்களிப்பை செலுத்தி வருகிறார். அதனொரு பகுதியாக மத்திய அரசின் சுகாதாரத் திருவிழாவை மதுரையில் இரண்டு இடங்களில் நடத்தியுள்ளார். ஞாயிறன்று திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழா வில் நானும் பங்கேற்றேன். மக்களவை உறுப்பினர் என்பதை யும் தாண்டி அவர் ஒரு சிறந்த எழுத் தாளர், கவிஞர். அவரை சந்தித்து ‘வேள்பாரி’ நாவலை பெற்றுச் செல்வதற்காக வந்துள்ளேன். இந்தத் தருணத்தில் பத்திரிகையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தலின் போது அவரவர் கட்சி களின் கொள்கைகளைச் சொல்லி வாக்குக் கேட்பது இயல்பு. தேர்தல் வெற்றிக்குப் பின் வெற்றி பெற்றவ ரோடு இணைந்து மக்கள் பணியாற்று வதுதான் பொருத்தமானது. அந்த அடிப் படையில் நானும் வெங்கடேசனும் மதுரை நகரை எழில்மிகு நகராக மாற்று வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். மதுரை நகரின் தேவைகள் குறித்து அவர் ஆலோசனைகள் வழங்கினால் அதை முதல்வர் எடப்பாடி பழனி சாமியிடம் தெரிவித்து கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் தமிழகம், மதுரை நகரின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடமிருந்து நிதி உள்ளிட்ட உத விகள் தேவைப்பட்டால் அதை சு.வெங்க டேசன் மூலமாக நாடாளுமன்றத்தில் எழுப்பிப் பெறுவோம். எங்களுக்குள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகு பாடெல்லாம் கிடையாது. இருவரும் மக்கள் பிரதிநிதிகள். மக்களின் தேவை கள், மதுரை நகரின் வளர்ச்சி இதுவே எங்களது பிரதான குறிக்கோள். இவ்வாறு அவர் கூறினார். மேலும், ‘‘மதுரை பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி பணிகள் வங்கிகளில் கடனுதவி பெற்று நடைபெற்று வருகிறது. பெரியார் பேருந்துநிலையப் பணிகள் 19 மாத காலத்தில் நிறைவு பெற வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் கூடுதலாக ஐந்து முதல் ஆறுமாதத்தில் பணிகள் நிறைவடையும். தற்காலிகமாக பெரியார் பேருந்து நிலையத்தில் நிழற்குடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென மதுரை மாநகராட்சி ஆணையாளரை வலியுறுத்துவேன். தெற்குவாசல் மேம்பாலத்தில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதைத் தவிர்க்க உரிய மாற்று ஏற்பாடு கள் செய்வது குறித்து ஆலோசிக்கப் பட்டு வருகிறது. மேலும் மதுரை ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் பாலம் அருகில் கூடுத லாக பாலங்கள் கட்டப்பட உள்ளது. இதன்மூலம் மதுரை நகரின் போக்கு வரத்து நெரிசல் ஓரளவிற்கு கட்டுப் படுத்தப்படும். மதுரை நகரின் கழிவு நீர் வைகை ஆற்றில் கலப்பதை முற்றி லுமாக தடுக்க பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு வைகையின் இருபுறத்திலும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது’’ என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். (ந.நி.)