tamilnadu

img

நாகை தொகுதி வேட்பாளர் வை.செல்வராஜை அமோக வெற்றி பெறச் செய்வோம்!

திருவாரூர், மார்ச் 20 - நாகை தொகுதி வேட்பா ளர் வை.செல்வராஜை வெற்றி பெறச் செய்ய களப் பணி ஆற்றுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர் அலுவல கத்தில் மாவட்டக் குழு கூட்டம் புதன்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு கட்சி யின் மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உரையாற்றினார். மத்தி யக் குழு உறுப்பினர் பெ. சண்முகம் சிறப்புரையாற்றி னார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த வை.செல்வ ராஜை கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடு கிறார். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய களப் பணி ஆற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.  கூட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், மாவட் டக் குழு உறுப்பினர்கள், கட்சியின் ஒன்றிய, நகரச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.