மோடி அரசின் நவ பாசிச தாக்குதலை எதிர்த்து விரிவான அணி அமைப்போம்!
மதுரையில் சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி
“ஜனநாயக உரிமைகள் மீது நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடுத்துவரும் நவ பாசிச தாக்குதலை எதிர்த்துப் போராட மதச்சார்பற்ற சக்திகளை அணி திரட்டி விரிவான அணியை ஏற் படுத்துவது” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு முடிவு செய்துள்ளதாக கட்சி யின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறினார். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், திங்கட்கிழ மையன்று (ஏப். 7) மதுரை தெப்பக் குளம் அருகிலுள்ள சிபிஎம் ஸ்தா பகத் தலைவர்களில் ஒருவரான பி. ராமமூர்த்தி, மகபூப்பாளையம் கட்சி அலுவலகத்திலுள்ள ‘தூக்குமேடை தியாகி’ பாலு ஆகியோரின் சிலை களுக்கு பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, மாலை அணிவித்து செவ் வணக்கம் செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகை யில் கூறியதாவது: கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் மாநாட்டு வர வேற்புக்குழு தலைவருமான கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், மாநிலத்தில் மிக வும் பிரபலமான மக்களவை உறுப்பி னரும் வரவேற்புக்குழு செயலாளரு மான சு. வெங்கடேசன் ஆகியோர் வழிகாட்டுதலில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24வது அகில இந் திய மாநாட்டை மதுரையில் வெற்றி கரமாக நடத்திய தமிழ்நாடு மாநி லக்குழுவுக்கும், மதுரை மாநகர், புற நகர் மாவட்டக் குழுக்களுக்கும், கட்சி யின் மத்தியக்குழு சார்பில் பாராட்டு தல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நூற்றுக்கணக்கான செந்தொண் டர்களும் சிறப்பாக பணியாற்றினர். தோழர்கள் பி. ராமமூர்த்தி, ஏ. பாலசுப்பிரமணியம், என். சங்க ரய்யா, கே.பி. ஜானகியம்மாள், கே. அனந்த நம்பியார், ஆர். உமாநாத் மற்றும் சமூக விரோதிகளால் படு கொலை செய்யப்பட்ட தோழர் லீலா வதி ஆகியோரின் பாரம்பரியத்தில் வந்த நமது தோழர்கள், அகில இந் திய மாநாடு வெற்றிபெற கடுமை யாக உழைத்துள்ளனர்.
நரேந்திரமோடி, அமித்ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் ஆகியோர் அடங்கிய நாசகரக் கூட் டணி கட்டவிழ்த்து விட்டுள்ள நவ பாசிச போக்குகளை எதிர்த்து, அனைத்துத் தரப்பு மக்களையும் திரட்டிப் போராட முன்வருமாறு கட்சி உறுப்பினர்களுக்கு இந்த மாநாடு தெளிவான அறைகூவலை விடுத் துள்ளது. திரைப்படத் துறையினருக்கு நவ பாசிச அரசு மிரட்டல் அரசியலில் திரைக்கலைஞர்கள் செல்வாக்கு செலுத்தக்கூடிய மாநிலம் தமிழ்நாடு ஆகும். மாநாட்டின் போது ஏராளமான திரைக்கலைஞர்கள் வருகை தந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். மாநாடு நடந்த காலகட்டத்தில் சென்னை மற்றும் கேரளத்தின் சில நகரங்களில் மத்திய அமலாக்கத் துறை ஒரு திரைப்படம் தொடர்பாக திடீர் சோதனைகளை நடத்தி யுள்ளது. உங்களுக்கு தெரியும். ‘எம்புரான்’ திரைப்படம் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கிறது. அந்தத் திரைப்படம் இடது சாரிக் கட்சியினர் எடுத்த திரைப்படம் அல்ல. அந்தப் படம் சிறுபான்மையி னரை ஆதரிக்கிறது என்பதற்காக, அதைத் தயாரித்தவர்கள் மற்றும் அந்த படத்தில் நடித்தவர்கள் பழி வாங்கப்படுகின்றனர். 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநி லத்தில் நடைபெற்ற கலவரத்தை அந்த திரைப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் அதில் நடித்த வர்கள்- பிரபலமான கலைஞர்கள் என்றபோதும் அவர்கள் அனை வரும் மிரட்டப்படுகின்றனர். ஜன நாயக உரிமைகள் மீது நரேந்திர மோடி தலைமையிலான அரசு நவ பாசிச தாக்குதலைத் தொடுத்துள் ளது. இதை எதிர்த்துப் போராட விரி வான போராட்ட அணியை ஏற்படுத்து வது என அகில இந்திய மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்மாதிரியான தமிழ்நாடு அந்த வகையில் தமிழ்நாடு முன் மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. இங்கு திமுக தலைமையிலான அணியில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த அணி, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வும், அதனுடன் கூட்டணி வைத்த கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற விடாமல் தடுத்து நிறுத் தியது. இதுபோன்ற அணி சேர்க்கை மற்ற மாநிலங்களிலும் அவசியம் தேவைப்படுகிறது. சில மாநிலங்க ளில் அந்த மாநிலத்திற்கென்று உள்ள பிரத்யோக அரசியல் சூழல் காரண மாக இது சாத்தியமில்லாமல் போக லாம். இது நமது கட்சிக்கு உள்ள முதன்மையான அரசியல் கடமை யாகும். பெண்களின் பங்கேற்பை அதிகரிப்போம் நகர்புறம், கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்கள், விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை - எளிய மக்களின் வாழ்வா தார கோரிக்கைகளுக்காக போராட வேண்டியுள்ளது. இருப்பினும், நமது கட்சியின் சுயேச்சையான பலத்தையும் இடது ஜனநாயக முன் னணியின் பலத்தையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். மக் கள் தொகையில் சரிபாதி உள்ள பெண்கள் பல இடங்களில் புறக்க ணிக்கப்படுகின்றனர். இந்நிலை யில், போராட்டங்களில் அவர்களை பெருமளவிலான எண்ணிக்கையில் பங்கேற்கச் செய்ய கட்சி முடிவு செய்துள்ளது.
கட்சி அமைப்புகளில் மகளிர், இளைஞர், மாணவர் பிரதி நிதித்துவத்தை அதிகப்படுத்த கட்சி எடுத்த முடிவை பிரதிபலிக்கும் வகை யில் புதிய மத்தியக் குழு அமைந் துள்ளது. பலப்படுத்தப்பட வேண்டிய பாலர் சங்கம் இது மட்டுமல்ல கட்சியானது, சிறுபான்மையினர், பட்டியலின மற்றும் பழங்குடியினர், மாற்றுப் பாலினத்தவர் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணி திரட்டி போராடத் திட்டமிட்டுள்ளது. வருங்கால தலைமுறையினரை முறையாக வளர்த்தெடுக்க பாலர் சங்கத்தையும் மிகப்பெரிய அளவில் பலப்படுத்த உள்ளோம். போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை மீட்போம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியமான தீர்மானம், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து, இளைஞர்களை மீட்டெ டுத்து அவர்களை சரியான பாதைக்குக் கொண்டு வருவதுதான். போதைப் பழக்கம், தற்போது நாட்டில் இளைஞர்களை பெருமள வில் சீரழித்துக் கொண்டிருக்கிறது. நமது கட்சியும் வெகுஜன அமைப்பு களும் இதற்காக தீவிரமாக பணி யாற்றி, போதைப் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை மீட்டெ டுக்க உள்ளோம்.
இவை தவிர, ஒன் றிய அரசின் 3 தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை எதிர்த்து, மத்திய தொழிற்சங்கங்கள் மே 20 அன்று நடத்த உள்ள பொது வேலைநிறுத் தத்தை ஆதரிப்பது எனவும் அந்த போராட்டம் முழு வெற்றிபெற பாடு படுவது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு முடிவுசெய்துள்ளது. இவ்வாறு எம்.ஏ. பேபி கூறி னார். பேட்டியின் போது கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சு. வெங்கடேசன் எம்.பி., கே. சாமுவேல் ராஜ், எஸ். கண்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பகுதிக்குழு செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.