போதைப் பொருட்களை ஒழிப்போம்! பாராசூட் சாகச விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர், ஏப்.28- பெரம்பலூரில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாராக்ளைடிங் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூரில், பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் விளை யாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலால் துறையின் சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பாரா க்ளைடிங் சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பாரசூட்டில் போதை ஒழிப்பு குறித்த பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல் மற்றும் இரூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஆர். பவித்ரா, லாடபுரம் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் ஜெ. ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் பாராசூட் மூலம் வானில் பறந்து “போதை இல்லாத தமிழ்நாடு” குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக மாவட்ட ஆட்சியர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யரிடம் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வு தொடர்பாக பள்ளி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள போதை ஒழிப்பு மன்றங்களின் செயல்பாடுகள், அதன் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு பணிகள் குறித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, உதவி ஆணை யர் (கலால்) சுந்தரராமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.முரு காம்பாள் மற்றும் பொதுமக்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.