tamilnadu

img

ஆதரவற்ற குழந்தைகளை பலி வாங்கிய விவேகானந்த சேவாலயம் மூடப்படுகிறது

மூன்று சிறுவர் குடும்பத்திற்கு தலா  ரூ.2 லட்சம் இழப்பீடு: முதல்வர் அறிவிப்பு

திருமுருகன் பூண்டியில் உள்ள காப்பகத்தில் உணவு சாப்பிட்ட பின்னர் உடல்நலம் சரியில்லாமல் மாதேஷ் (15), பாபு (13), ஆதீஷ் (8) ஆகிய 3 பேர் பலியாகினர். இந்த செய்தியை கேட்டு மிகவும் துயருற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியதாகவும், பலியான சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

திருப்பூர், அக்.7- ஆதரவற்ற மூன்று குழந்தைகளை பலிவாங்கிய விவேகானந்த சேவா லயம் மூடப்படுகிறது. அந்த காப்பக நிர்வாகத்தின் அலட்சியம், மெத்தனம் காரணமாக இந்த துயர சம்பவம் நடை பெற்றுள்ள நிலையில், காப்பகத்தின் நிர்வாகிகள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என்று மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். திருப்பூர் விவேகானந்த சேவாலயத்தை வெள்ளியன்று பார்வை யிட்ட பின் மாநில சமூகநலத் துறை  அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:  திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவே கானந்தா சேவாலயத்தில் ஆதர வற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 3 குழந்தைகள் உயிரிழந்துள் ளனர். எஞ்சிய 11 மாணவர்களும் வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி பிரச்சனைகளில் அவதிப் பட்ட நிலையில், திருப்பூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இந்த செய்தி அறிந்து வருத்தம் அடைந்  தார். தாய், தந்தை இல்லாத நிலை யில் இன்றைக்கு இந்த நிலை ஏற் பட்டிருப்பதை அறிந்து, பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன் தலைமை யில் விசாரணைக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள மிகுந்த கவலை யுடன் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள் ளார். இதில் சமூக நலத்துறை இயக்கு நர் வளர்மதி உள்ளிட்டோர் உள்ளனர். தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 

குழந்தைகள் தங்கியிருந்த மற்றும் இறந்த இடத்தையும் பார்வை யிட்டோம். 100 மீட்டர் தாண்டி தான்  கழிவறை இருந்துள்ளது. இதனால் குழந்தைகள் இரவு நேரங்களில் இயற்கை உபாதைக்கு கூட வழி யின்றி மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். அதேபோல் அங்கு உரிய காப்பாளர் யாரும் இல்லை. தாய், தந்தை இல்லாத குழந்தைகள் விஷயத்தில் உரிய கவனம் எடுக்காமல் அஜாக்கிரதை, மெத்தனமாக இருந்த தால்தான் இப்படியொரு துயரச் சம்ப வம் நடந்துள்ளது. இது கண்கூடாக தெரிகிறது. இன்றைக்கு 3 பேர் உயிரிழந்த நிலையில், மெத்தனப் போக்காக கையாண்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் ஸ்ரீ விவே கானந்த சேவாலயம் மூடப்படுகிறது.  இந்த குழந்தைகள் அனைவரும் ஈரோட்டில் உள்ள அரசு காப்ப கத்துக்கு சிகிச்சை முடிந்ததும் மாற்றப் படுவார்கள். அரசின் பராமரிப்பில் இருப்பார்கள்.  உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத் தாருக்கு திமுக சார்பில் ரூ. 1 லட்சமும், சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு  ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. அரசு நிவாரணத்துக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் உரிய முன்மொழிவு எடுக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக முதல்வர் வழங்குவார். 

காப்பக நிர்வாகி மீது அரசு சட்டப்படி, குற்ற நடவடிக்கை எடுக்கும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியாவிடம் விசா ரித்தோம். கான்கிரீட் கட்டிடம் இருந்த போதும், குழந்தைகள் இருந்த இடம் தகர ஷீட் போடப்பட்டு தங்க வைக்கப் பட்டிருந்தது. இது தொடர்பாக குழந்தை கள் பாதுகாப்பு நல அலுவலர் ஆகஸ்ட் மாதம் ஆய்வு செய்தாலும், அடுத்து தொடர் நடவடிக்கை இல்லாததால், அவர் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்கப்படும்.  திருப்பூர் மாவட்டத்தில் 13 ஆதர வற்றோர் இல்லங்கள் உள்ளன. அனைத்து காப்பகங்களும் திடீர் ஆய்வு  செய்யப்படும். காய்ச்சலா அல்லது உணவா என்பது விசாரணை முடிவில் தான் தெரியவரும். வெளியிலிருந்து வரும் தயாரிக்கப்பட்ட அல்லது சமைக் கப்பட்ட  உணவுகளை காப்பகங்கள் வாங்கக்கூடாது என சட்ட விதிமுறை உள்ளது. காப்பக நிர்வாகியும், கண் காணிப்பாளருமான செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமைய லர் 4 மணிக்கு வீட்டுக்கு சென்று விடு வார். அரசு இல்லங்களில் படிக்க வைத்து, அவர்களுக்கு கல்லூரி வரை  உரிய உதவி செய்து தரப்படும். அனை வரின் வாழ்க்கைக்கு அரசு உத்தர வாதம் தரும். கல்வி மற்றும் வாழ்வா தாரத்துக்கு அரசு உடன் நிற்கும். காப்ப கங்கள் சிறிய அறை, தகர ஷீட்டுடன் இருந்தது. அது குழந்தைகளை தங்க வைக்கும் இடமே இல்லை. பிரேத பரி சோதனை முடிவுக்கு பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். அமைச்சர் கீதாஜீவன் பேட்டி அளித்த போது, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.7- திருமுருகன் பூண்டி விவேகானந்த சேவாலயத்தில் சிறுவர்கள் உயிரிழப்பு க்குக் காரணமான காப்பக  நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியினர், மாதர் சங்கத்தினர் காவல்துறை தடை யை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். பூண்டி கட்சி அலுவலகத்தில் இருந்து, விவேகானந்த சேவாலயம் சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணமான நிர்வாகிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பியவாறு அவிநாசி - திருப்பூர் சாலையில் அணிவகுத்துச் சென்றனர். சேவாலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நிலையில், பூண்டி பேரு ந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் இவர்களைத் தடுத்து கைது செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி தலை மையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் அ.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.வெங்கடாசலம், ஆர்.பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், கிளைச் செயலாளர்கள் ராசு, காமராஜ் மற்றும் பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், பார்வதி மற்றும்  மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ரா, மாவட்டப் பொரு ளாளர் ஆர்.கவிதா, மாநிலக்குழு உறுப்பினர் சி.பானுமதி, மாவட்ட நிர்வாகி ஷகிலா உள்பட சுமார் 50 பேரை  காவல்துறையினர் கைது செய்து சிறைவைத்த னர். அதேபோல் திக., விசிக., உள்ளிட்ட கட்சியினரும் சம்பவ இடத்துக்கு வந்த போது காவல் துறையினர் முன்கூட்டியே அவர்களைக் கைது செய்து மண்ட பத்தில் அடைத்து வைத்தனர்.