உயர் கல்வியில் பாய்ச்சல் வேகம் சமூக நீதியில் முன்னுதாரணம்
புதிய கேரளம் படைப்பதன் பகுதியாக கேரளத்தை புதிய அறிவார்ந்த சமூகமாக வடிவமைக்கும் முயற்சிகளில் முன்னோடியாக உள்ளது உயர்கல்வித்துறை. மேம்பட்ட புதிய கேரளம் சமூக நீதியும் சமவாய்ப்பும் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் இந்த பயணம் தொர்கிறது. நமது சமூகத்தில் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் பிரிவுகளான முதியோர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினர் உள்ளிட்டோரின் முழுமையான மறுவாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பன்முகத்தன்மை கொண்ட திட்டங்களோடும் அதோடு இணைந்த செயல்பாடுகளுடனும் உள்ளது சமூக நீதித்துறை. ‘அறிவார்ந்த கேரளம் நலமான கேரளம்’ என்கிற இலக்கு நோக்கி கேரள மக்களின் கரம்கோர்த்து வந்ததே கடந்த நான்கு ஆண்டுகள். பள்ளிக்கல்வியில் கடந்த எல்டிஎப் அரசு புரிந்த சாதனைகளை உயர் கல்வியிலும் அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. அதிகாரத்துக்கு வந்தபிறகு உயர்கல்வியில் 900 பட்டப்படிப்புகளும் 204 பட்டமல்லாத படிப்புகளும் அனுமதிக்கப்பட்டன. 36 கல்லூரிகள் புதிதாக துவக்கப்பட்டன. இதன்மூலம் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன.
வரும் கல்வி ஆண்டில் ஊக வணிகம் தொடர்பான நான்கு வருட பட்டப்படிப்புகள் துவக்கப்படுகிறது. 4 ஆண்டுகளில் ரூ.6,000 கோடி கடந்த நான்கு ஆண்டுகளில் ஆறாயிரம் கோடி ரூபாய் கேரள உயர்கல்வித்துறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே தெரிவித்துள்ளது. கிப்பி, ரூஸ, மாநில அரசின் திட்ட நிதி ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அடிப்படை மேம்பாட்டுப் பணிகள் நடந்துள்ளன. சீர்மிகு வகுப்பறைகள் நவீன ஆய்வகங்கள், நூலகங்கள், கல்வி மற்றும் நிர்வாக கட்டிடங்கள் இதன் பகுதியாக பயன்பாட்டுக்கு வந்தன. கேரள பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி (எம்.ஜி) பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நாட்டிலேயே சிறந்த ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்பட்டன. அடிப்படை வசதிகள் மேம்பாடு, உயர்கல்வியின் பரவலான முன்னேற்றத்துக்கான அறிக்கைகள் சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட 3 ஆணையங்களின் பரிந்துரைகள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்படுகிறது. உயர் கல்வியில், தீவிர மாற்றம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படும் நான்கு ஆண்டு பட்டப்படிப்புக்கான வடிவமைப்பு இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
உயர்கல்வி தர மேம்பாடு பெருமளவில் பலனளிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் 247 கல்வி நிறுவனங்கள் ‘நாக்’ அங்கீகாரம் பெற்றுவிட்டன. கேரள, எம்.ஜி பல்கலைக்கழகங்கள் இரட்டை ஏ பிளஸ்ஸும், கோழிக்கோடு, காலடி, கொச்சி பல்கலைக் கழகங்கள் ஏ பிளஸ்ஸும் பெற்றுள்ளன. 24 கல்லூரிகளும் இரட்டை ஏ பிளஸ் பெற்றுள்ளன. என்.ஐ.ஆர்.எப் தரவரிசையில் முதல் 200 இல் 42 கல்லூரிகள் (21 சதவிகிதம்) கேரளத்தில் உள்ளவையாகும். டைம்ஸ் உயர்கல்வி தரப்பட்டியலில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் நாட்டிலேயே மூன்றாம் இடம் பிடித்தது. என்ஐஆர்எப் தரவரிசையில் கேரள (24 ஆம் இடம்) மகாத்மா காந்தி(31) குசாற் (37) காலிக்கட் (70) என உயர்ந்த தரவரிசையை பெற்றன. கேரள உயர் கல்வியின் தரத்திற்கு உதாரணங்கள் மட்டுமே இவை. முதியோர் பாதுகாப்பு ‘பயன்படுத்து; தூக்கி எறி’ என்று கூறும் முன்னேறிய முதலாளித்துவத்தின் தூக்கி எறியும் கலாச்சார காலத்தில் நமது மூத்த குடிமக்களின் நலனும் பாதுகாப்பும் உறுதிப்படுத்த பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது சமூக நீதித்துறை. தாய் தந்தையருக்கும் மூத்த குடிமக்களுக்கும் தேவையான ஜீவனாம்சமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தும் தலையீடுக்கு உகந்த வகையில் பராமரிப்பு தீர்ப்பாயங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மாநிலத்தில் 27 மெயின்டனன்ஸ் ட்ரிபியூன்கள் உள்ளன. 14567 என்னும் கட்டணமில்லா தொலைபேசியில் மூத்த குடிமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
யாருடைய உதவியும் இல்லாதோருக்கு முதியோர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அவசர உதவிகள் வழங்கப்படுகின்றன. முதியோருக்கான பகல்நேர பராமரிப்பு மையங்கள் மூலம் சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. வயோமித்ரம் திட்டத்தின் கீழ் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின் சேவையும் மருந்தும் கவுன்சிலிங்கும் வழங்கப்படுகிறது. வயோஅமிர்தம் திட்டத்தில் முதியோர் இல்லங்களில வசிப்போருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது. செக்கன்ட் இன்னிங்ஸ் ஹோம் திட்டத்தில் நவீன வசதிகளுடன் முதியோர் இல்லங்கள் மேம்படுத்தப்படுகின்றன. வயோ மதுரம் திட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள முதியோருக்கு குளுக்கோ மீட்டர் வழங்கப்படுகிறது. இப்படி ஏராளமான திட்டங்களில் மூத்த குடிமக்கள் பயனடைகிறார்கள். முதியோர் கணக்கெடுப்பு, முதியோர் ஆணையம் முதியோர் வெப் போர்ட்டல் என புதிய திட்டங்களும் தயாராகி வருகின்றன. மூன்றாம் பாலினரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் கொண்டுவர ‘மழவில்’ என்கிற திட்டம் வழிவகுத்துள்ளது. பட்டம் படிக்கும் மூன்றாம் பாலினருக்கு ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் வழங்கும் வர்ணம் திட்டமும் துவக்கப்பட்டுள்ளது.
யத்னம் என்னும் போட்டித்தேர்வுகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம், ஸாகல்யம் என்னும் தொழிற்பயிற்சி மற்றும் சுயதொழில் செய்வதற்கான திட்டம், கருதல் என்னும் அவசர உதவி வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை இந்த அரசு அதிகாரத்துக்கு வந்தபிறகு கொண்டு வந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை இந்த அரசு பொறுப்புக்கு வந்தபிறகு மிகவும் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளின் அன்னையருக்கு இலவசமாக மின் ஆட்டோ வழங்கும் ஸ்னேகயானம் திட்டம் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவிகிதம் இட ஒதுக்கீடு உறுதிப்படுத்த உதவும் 1,263 இடங்கள் கண்டறியப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்கள் / வாரியங்கள்/ கழகங்கள்/ கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு அமைப்புகளின் எல்லைக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களிலும் இந்த ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யும் வழிமுறைகளும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கலை விளையாட்டுத்துறைகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாட்டுக்கு உதவும் நிதி உதவியுடன்கூடிய ஷிரேஸ்டம் என்னும் புதிய திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு கிராமங்கள் துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிப்மர், நிஷ் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கு உலகத்தரத்திலான முன்மாதிரிகளை படைத்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான வெர்ச்சுவல் ரியாலிட்டி அமைப்பு நாட்டிலேயே முதன்முறையாக நிப்மரில் கொண்டுவரப்பட்டுள்ளது. நரம்பு பிரச்சனையால் சலனமற்றவர்களுக்கு எளிதில் சிகிச்சை அளிக்க அட்வான்ஸ்டு நியூரோ பிசியோதெரபி அலகு, இயங்க முடியாத பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்களின் இயங்கும் சக்தியை வலுப்படுத்தவும், வீல் டிரான்ஸ் புராஜக்ட் போன்ற பல்வேறு திட்டங்கள் நிப்மர் மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கணவனை இழந்த அல்லது கைவிடப்பட்ட கடும் உடல், மனநலம் பாதிக்கப்பட்ட கடும் சவால்களை எதிர்கொள்ளும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சுயதொழில் நிதிஉதவி வழங்கும் சுயாசயா போன்ற ஏராளமான திட்டங்களும் மாற்றுத்திறனாளிகளின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதிப்படுத்தும் பாரியர் ப்ரீ கேரளா போன்ற ஏராளமான செயல் திட்டங்களையும் இந்த அரசு அமல்படுத்தி வருகிறது.