கல்பற்றா, நவ.19- கேரளத்தில் வயநாடு மாவட்டம் முண்டக்கை - சூரல்மலை பேரிடர் பாதிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசின் இழைக்கும் அடா வடித்தனத்தைக் கண்டித்து பொது மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நவ.19 (செவ்வாய்) அன்று நடந்த முழு அடைப்பால் (ஹர்த்தால்) வயநாடு மாவட்டம் முற்றிலும் முடங்கியது. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வர்களை மனிதர்களாகக்கூட பார்க்காத ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு எதி ராக வயநாடு மாவட்டத்தில் போராட் டங்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன. முழு அடைப்பு செவ்வாயன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடை பெற்றது. இதையொட்டி, இடது ஜன நாயக முன்னணியினர் பல்வேறு மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிலச்சரிவை தேசிய பேரிடராக அறி வித்து உதவி கோரி கேரளம் மூன்று மனுக்களை ஒன்றிய அரசிடம் அளித்தா லும், கேரளத்தை ஒன்றிய அரசு புறக் கணித்தது. எல்.டி.எப் அறிவித்துள்ள முழு அடைப்புக்கு வகுப்புவாத அமைப்புகள் உட்பட மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்து வரு கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணி யும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. முண்டக்கை, சூரல்மலை நிலச் சரிவு துயரத்திற்குப் பிறகு, பிரதமர் வயநாட்டிற்குச் சென்று பல வாக்குறுதி களை அளித்தார். ஆனால் பிரதமரும், ஒன்றிய அரசும் மாவட்டத்திற்கு உதவா மல், நாட்டிலேயே மிகப்பெரிய நிலச்சரி வாக இருந்தும், விரோதப் போக்கையே கடைப்பிடித்தனர். முழு அடைப்பின் பிரச்சாரம் மற்றும் வெற்றிக் காக எல்டிஎப் தலை மையில் அனைத்து ஊராட்சி மையங்களிலும் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வயநாடுக்கு உரிய நிதியுதவி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர எல்டிஎப் முடிவு செய்துள்ளது. எல்டிஎப் முழு அடைப்பின் போது சபரிமலை பக்தர்களுக்கும் அத்தியாவசிய சேவை களுக்கும் விலக்களிக்கப்பட்டிருந்தது. முழு அடைப்பையொட்டி, மானந்த வாடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் பேரணி நடத்தினர். காந்தி பூங்கா வில் தொடங்கிய பேரணி காந்தி பூங்கா வில் நிறைவடைந்தது. பேரணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.வி.சகாதேவன் தலைமை வகித்தார். முழு அடைப்பை வெற்றி பெற வலியுறுத்தி எல்.டி.எப் கல்பற்றா நகர கமிட்டியினரும் பேரணி நடத்தினர்.