tamilnadu

img

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகள் திறந்து வைப்பு

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,  முடிவுற்ற பணிகள் திறந்து வைப்பு

பெரம்பலூர், ஜுன் 10-  பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 14 ஊராட்சிகளில் உள்ள பகுதிகளில் ரூ.15.68 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அடிக்கல் நாட்டி, புதிய பணிகளை திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, புதுக்குறிச்சி, மாக்காய்குளம், ஜமீன்பேரையூர், இலுப்பைக்குடி, சாத்தனூர் குடிக்காடு, குரும்பா பாளையம், கொட்டரை, ஆதனூர், மேலமாத்தூர், மருதையான் கோவில், கீழமாத்தூர், சடைக்கன்பட்டி, அல்லிநகரம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், ரூ.15.69 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசு திட்டப்பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும், பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், முன்னாள் ஆலத்தூர் ஒன்றியக் குழுத்தலைவர் ந.கிருஷ்ணமூர்த்தி, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.