tamilnadu

img

ஆளுநரை இன்று சந்திக்கிறார் சட்ட அமைச்சர் ரகுபதி

சென்னை,நவ.30- ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய் வது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவை யில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தாக்கல் செய்யப் பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்க வில்லை.  ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பி னரும் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார். அதில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோ தாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்ட னைகள் விதிப்பது தொடர்பான அதி காரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும் இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன் லைன் ரம்மி தடை  சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும்  குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆளுநர் கேட்ட விளக்கங்க ளுக்கு பதிலளித்து தமிழக  அரசு கடிதம் அனுப்பி யது. அந்த விளக்கத்தை ஆளுநர் ஆய்வு செய்துவருகிறார்.  இந்நிலையில், தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, வியாழ னன்று(டிச.1) காலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். அப்போது, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளார். உரிய விவரங்களை சேக ரித்து முறையாக ஆய்வு செய்து வல்லுநர் குறித்த அறிக்கைக்குப் பிறகே சட்ட மசோதா உருவாக்கப் பட்டுள்ளதாகவும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளை யாட்டுகளை தடை செய்யும் மசோதா, அரசியலமைப்பு சட்டத் திற்குட்பட்டே கொண்டு வரப் பட்டது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.