tamilnadu

img

தேசிய மருந்தியல் கழகத்தை மதுரையில் துவக்கும் பணியை தீவிரப்படுத்துக!

மதுரை,அக்.23-   தேசிய மருந்தியல் கழ கத்தை மதுரையில் துவக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று துறைச் செயலாளர்களிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., நேரில் வலியுறுத்தி னார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வரு மாறு: தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக்கழ கத்தை  ( NIPER ) மதுரையில் அமைப்பது தொடர்பான கடிதங்களை வழங்கி, திட்டத் தை துவக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், விரைந்து துவக்க வேண்டிய தேவை குறித்தும் உரம் மற்றும் இரசாயனத்துறை செயலாளர் அபர்னா அவர்க ளையும், நிதித்துறை செயலா ளர்(செலவினம்) டி.வி. சோமநாதன் அவர்களையும் சந்தித்துப் பேசினேன். தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திற்காக மதுரையில் 2012 ஆம் ஆண்டு தரப்பட்ட நூறு ஏக்கர் நிலமானது முன்நுழைவு அனும திக்கான சான்று மட்டுமே தரப் பட்டுள்ளது.  

அதன் பிறகு அந்நிலமானது கழகத்தின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படாமலே இருக்கி றது. அதற்கான விண்ணப்ப மும் மருந்தியல் கழகம் சார்பில் தரப்படவில்லை. இது தேவையற்ற பிரச்ச னையை பிற்காலத்தில் உரு வாக்கும். குறிப்பாக மதுரை எய்ம்ஸ் போல, நிலத்துக் கான பெயர் மாற்றம் மற்றும் ஒப்படைத்தல் என்பதே பெரும் காலவிரயத்தை உருவாக்கும் நிலையும் ஏற்படலாம். சில நேரம் பிற வேலைகளுக்காக நிலம் பயன்படுத்தப்பட்டுவிடும் ஆபத்தும் உண்டு. எனவே நிலத்தை தேசிய மருந்தியல் கல்விக் கழ கத்தின் பெயரில் மாற்றித்தர உரிய விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு துறைச்செயலாளரிடம் வலியுறுத்தினேன். மதுரை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியிடமிருந்து பெற்று வந்த அதற்குறிய விண்ணப்பத்தையும் ஒன்றிய அரசின் செயலாளர் வசம் ஒப்படைத்தேன். விரைவில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று நம்பு கிறேன். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

;