தருமபுரி, டிச.16 - தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதிக்குழு பிக்கலி ஊராட்சி கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தருமன். இவர் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 8 செண்ட் நிலம் மற்றும் அதற்கான பத்திரத்தை கட்சிக் காக வழங்கினார். நிலம் வழங்கிய தருமனுக்கு மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் சால்வை அணிவித்து பாராட்டி கெளரவித்தார். இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா.சிந்தன், ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம் பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.மாதன், சி.நாகராசன், சோ.அருச்சுனன், வே.விசுவநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சின்ன சாமி பகுதிக் குழு செயலாளர் சக்தி வேல் மற்றும் டி. ஆர். சின்னசாமி, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.