2,630 கோயில்களில் குடமுழுக்கு
சென்னை: சென்னை தங்கசாலையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அல்லூரி வெங்கடாத்திரி சுவாமி மடம் (எ) ராமர் கோயிலுக்கு மீண்டும் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ஞாயிறன்று அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திருக் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் “இன்று வரை 2,634 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது” என தெரிவித்தார்.
ஏடிஎஸ் விசாரணை
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமலையில் வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்து கேரள நபர் பலியான விவகாரம் தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) மற்றும் க்யூ பிரான்ச் போலீசார் சம்பவம் நடை பெற்ற இடம் மற்றும் தாலுகா காவல் நிலையத்தில் விசா ரணை நடத்தினர்.
மார்ச் 14-க்கு ஒத்திவைப்பு
விழுப்புரம்: அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசார ணையை மார்ச் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தர விட்டது.
உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரி விக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் 94983-83075, 94983-83076 என்ற செல்பேசி எண்களை பயன் படுத்திக் கொள்ளலாம் என்று பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருக்கிறார்.
தேமுதிக பங்கேற்கும்
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மார்ச் 5 ஆம் தேதி சென்னை தலைமைச் செய லகத்தில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.
மும்மொழி கொள்கை வேண்டாம்
தமிழ்நாட்டில் படித்து அமெரிக்காவில் பணியாற்றி வரும் தமிழர்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெக்சாஸில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தன் நிலை மறந்து கூப்பாடு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “என்னை பாலியல் குற்றவாளி என்று சொல்ல நீங்கள் யார்? எப்படிக் கூறு வீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா? விசாரணை நடை பெற்று வரும் போது குற்றவாளி என எப்படி முடிவு செய் வீர்கள். நீங்கள் நீதிபதியா? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் உங்கள் கருத்து என்ன? அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி ஏன் கண்டனம் தெரி விக்கவில்லை” என்று வாய்க்கு வந்தபடி தன்நிலை மறந்து பேசினார்.
தவெக நிர்வாகி கைது
தருமபுரி: தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (45). இவர் தமிழக வெற்றிக் கழக நகரப் பொறுப்பாளர். இவர், அவரது உறவினரின் 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் சுதாகரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.