tamilnadu

img

சிபிஎம் கடலூர் மாவட்டச் செயலாளராக கோ.மாதவன் தேர்வு

 கடலூர்,டிச.15-  சிபிஎம் கடலூர் மாவட்டச் செயலாளராக  கோ.மாத வன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட 24 ஆவது மாநாடு பெண் ணாடத்தில் டிசம்பர் 14,15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு. டி.பழனிவேல், முத்துலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர்.  அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம். மருதவாணன் வாசித் தார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஜி. ஆர். ரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வேலை அறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே. ராஜேஷ் கண்ணன் வரவு - அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் வாழ்த்து ரை வழங்கினார்.   புதிய மாவட்டக்குழு மாநாட்டில் 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக  எஸ்.ஜி. ரமேஷ்பாபு, வி.உதயகுமார்,  பி.கருப்பையன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திரு அரசு, ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜே. ராஜேஷ்கண்ணன், வி.சுப்பு ராயன், ஆர்.அமர்நாத், எஸ்.பிரகாஷ், பி.வாஞ்சிநாதன் ஆகிய 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளராக கோ.மாத வன் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டை நிறைவு செய்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றினார். தீர்மானங்கள் அமைப்பு சாரா நல வாரிய பதிவை எளிமைப் படுத்த வேண்டும்.  நீர்நிலை  புறம்போக்கில் வசிப்பவர் களுக்கு மாற்று இடம், மறு வாழ்வு வழங்க வேண்டும், சுய உதவி குழுக்களிடம் நுண் நிதி நிறுவனங்கள் அடாவடி வசூலை நிறுத்த வேண்டும். என்எல்சி நிறு வனத்தில் அவுட் சோர்சிங் முறையை கைவிட்டு, வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு, நிவாரணம், வேலை வழங்க வேண்டும். அம்பிகா சர்க்கரை ஆலை விவசாயிகளின் பெயரில் வங்கியில் பெற்ற கடனை ஆலையின் பெயரில் மாற்ற வேண்டும், வெலிங்டன் ஏரியை ஆழப்படுத்த வேண் டும். வனவிலங்குகளின் அழிவிலிருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.