சென்னை, ஜூன் 13- தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வெயி லின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளி கள் திறப்பு தள்ளி வைக்கப் பட்டது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு ஜூன் 12 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதனன்று (ஜூன் 14) பள்ளிகள் திறக்கப்படுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் வகுப்பு கள் தொடங்குகிறது. இது தவிர மழலையர் எல்கேஜி, யுகேஜி குழந்தை களுக்கும் வகுப்பு துவங்கு கிறது. இதனால் பாதுகாப்பு நடைமுறைகளை கடை பிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மாநகராட்சி, தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளி களுக்கு முதன்முதலாக வரும் குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்படுகிறது. இதுவரையில் பெற்றோர் அரவணைப்பில் இருந்த குழந்தைகள், அவர்களை பிரிந்து பள்ளிக்கு வருவ தால் அழவும், கூச்சலிடவும் வாய்ப்பு உள்ளது. அவர்களை அன்போ டும், பாசத்தோடும் ஆசிரியர் கள் வரவேற்று வகுப் பறைக்கு அழைத்து செல்லவும், அழுதால், விளையாட்டு பொருட் களை கொடுத்து சிரிக்க வைக்கவும் தயார்படுத்தப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு விளை யாட்டு சூழலை ஏற்படுத் தும் வகையில் பல பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியைகள் குழந்தை களோடு குழந்தைகளாகவே மாறி வகுப்பறையில் அமர வைக்க பல்வேறு அணுகு முறைகளை கையாள தயாராக உள்ளனர்.