நாகப்பட்டினம், ஜூன் 26 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி நேரடியாக சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெறும் சுற்றுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வு திங்களன்று நடைபெற்றது. ஊராட்சிகள் தோறும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெறும் சுற்றுப் பயண நிகழ்வு ஜூன் 26, 27, 28, 29, 30 ஆகிய ஐந்து நாள்கள் நடைபெறு கிறது. இதன் துவக்க நிகழ்ச்சி கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம் வடகரை ஊராட்சியில் நடைபெற்றது. அதன் பின்னர் கோகூர், ஆணைமங்கலம், வெங்கிடங்காள், ஒக்கூர், அகர கடம்பனூர், திருக்கண்ணங்குடி, பட்டமங்கலம், கூத்தூர், குருக்கத்தி, எர வஞ்சேரி, குருமனங்குடி, அத்திப்புலி யூர், செருநல்லூர், காக்கழணி, இலுப்பூர், வடக்காளத்தூர், இராதா மங்கலம், இருக்கை, வண்டலூர், 75 அணக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் வசிக்கும் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் திரளாக கூடியிருந்து, சட்டமன்ற உறுப்பினரிடம் நேரடியாக தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் சிபிஎம் நாகை மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணி யன், கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபுபக்கர், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள்தாஸ், வடகரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் டி.துரைராஜ் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.