tamilnadu

img

சமூக மாற்றம் உருவாக மாற்றுக் கொள்கை தேவை

சென்னை, ஜன.5 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் 4ஆவது மாநில மாநாட்டை யொட்டி சென்னை வியாசர்பாடியில் புத னன்று (ஜன.4) “சாதி மறுப்பாளர்கள் சங்கமம்” நடைபெற்றது.  மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கேரள தேவசம் போர்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:  கடந்த 15 ஆண்டுகளில் நாம் பல  வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். பல இழப்புகளை இக்காலத்தில் சந்தித்திருந்தாலும் சமூ கத்தில் அடக்குமுறையை அனுபவிக் கும் மக்களின் துயரை துடைக்க வேண்டும் என்ற கொள்கை நம்மை வழி நடத்திச் செல்கிறது. நமக்கு சுதந்திரம் கிடைத்ததன் 75ஆம் ஆண்டை நாம் விமரிசையாகக் கொண்டாடுகிறோம், ஆனால் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. 80விழுக்காடு ஏழைகள் அன்றாடம் இன்னல்களை சந்திக்கின்றனர். குறிப்பாக மலைவாழ் மற்றும்  பட்டியலின மக்கள் பெரும் துயரை அனுபவிக்கின்றனர். 

தீண்டாமை இன்னும் அகலவில்லை

75ஆவது சுதந்திர தினத்தில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக மலைவாழ் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள் ளார். ஆனால் அதே நேரத்தில் ராஜஸ் தானில் 9 வயதே ஆன மாணவி ஒருவர் வகுப்பறையில் அடித்து கொல்லப் பட்ட சம்பவமும் இதே நாட்டில்தான் நிகழ்ந்தது. உயர் சாதியினர் பயன் படுத்தும் குவளையில் நீர் அருந்தியது தான் அந்த பெண் குழந்தை செய்த  குற்றமாம்.  தீண்டாமை இன்னும்  பள்ளி வகுப்பறைகளில் பின்பற்றப்படு வது எவ்வளவு பெரிய கொடூரம் ! வகுப்பறையில் இரட்டை குவளை முறை, முகச்சவரம் செய்யாமை போன்றவை மனித விரோதச் செயல் கள். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டு களுக்கு பின்னும் தொடர்கிறது. 

சாதிய கட்டமைப்பே காரணம்!

இந்தியா முழுவதும் தொடரும் சாதியக் கட்டமைப்பு தான் தீண்டா மைக் கொடுமைகள் தொடர முக்கிய  காரணி, அதனை தகர்க்கத் தான்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி களமாடு கிறது. சாதியக் கட்டமைப்பினை தகர்க்க 1947 முதல் அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2014 முதல்  ஆட்சி செய்யும் நரேந்திர மோடி தலை மையிலான பா.ஜ.க அரசு சாதியக் கட்ட மைப்பை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அமைப்பு  சனாதன அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டது. இந்தியாவை இந்து நாடாக  மாற்ற அரசியலமைப்பின் மீது உறுதி ஏற்ற பா.ஜ.க அரசு முயல்வது தான் நாம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவாலாகும்.  மதச்சார்பின்மை என்ற வார்த்தை யை கேட்டாலே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. சாதி அமைப்பின் மீது  கொண்டிருக்கும் தாளாத பற்று கார ணமாக அனைவரும் சமம் என்பதை எழுத்தளவில் கூட அவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.  இன்று கேரளம் ஒரு மாற்றுக் கொள்கையை வெற்றிகரமாக முன்வைத்துள்ளது.  நாட்டின் பல்வேறு பகுதிகளில்  தீண்டாமைக்கு எதிரான போராட்டங் கள் நடந்திருந்தாலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது கேரளாவில்தான். அதற்குக் காரணம் அங்கு இடது ஜனநாயக முன்னணி அரசுகள் உருவானதே. சமூக மாற்றம் உருவாக மாற்றுக் கொள் கையும், அர்ப்பணிப்பும் தேவை. 1956இல் மொழிவாரி மாநிலங்கள் உரு வான அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்த லில் வெற்றி பெற்ற தோழர் இ.எம்.எஸ்.  நம்பூதிரிபாட்  தலைமையிலான இடது  ஜனநாயக முன்னணி  அரசு நிலச்  சீர்திருத்தத்தை அமலாக்கி நிலமில்லா ஏழைகளுக்கு நில உரிமை வழங்கியது. அதுவே  கேரளாவின் வளர்ச்சிக்கு அடி கோலுவதாக அமைந்தது. கல்வி  வழங்கியது. தொடர்ந்து 1980இல் தோழர் இ.கே. நாயனார் அரசு விவசாய தொழிலாளிகளுக்கு பென்சன் வழங்கி யது. இடதுஜனநாயக முன்னணி அரசு கள் தொடர்ந்து அமலாக்கி வந்த  கொள்கைகள் காரணமாக பல்வேறு திசைகளில் கேரளம் முன்னேறி உள்ளது.  உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியா 109வது இடத்திற்கு தள்ளப் பட்டு ஒரு அவலமான சாதனையை படைத்துள்ளது. நிதி ஆயோக் பட்டி யலில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பட்டினி அதிகமாக இருக்கும் சூழலில் கேரளாவில் 1விழுக்காட்டிற்கும் குறை வான மக்களே பட்டினியை சந்திக்கின்ற னர். இது போன்ற பல முன்னேற்றங்கள் இடது ஜனநாயக முன்னணி அரசுகளின் சீரிய செயல்பாடுகளால் நடந்துள்ளது. இந்த மாற்றம் நமது நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். சாதியக் கொடு மைகளுக்கு முடிவு கட்டி அனைத்து தரப்பு மக்களும் சமமாக வாழும் சூழல்  உருவாக்கப்படவேண்டியது அவசிய மாகும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் பேசினார்.

மக்கள் ஒற்றுமைக்கு  தடையாக சாதி 

விசிக துணைப் பொதுச் செயலா ளர் வன்னி அரசு பேசுகையில், தீண்டா மைக்கு எதிரான தொடர் போராட்டத்தை  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்தி வருகின்றன. சாதிய, சனாதன, வர்ணாசிரம கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாக்கள் முயற்சிக்கின்றன.  இவர்களைப் போல பொருளாதார வலிமை நம்மிடம் இல்லை. ஆனால் மக்கள் வலிமை நமக்கு உள்ளது. மக்கள் ஒற்றுமைக்கு சாதி தடையாக இருக்கிறது. சாதியக் கட்டமைப்பை இந்து மதம்தான் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் என்ற பொறுப்பை மறந்து  சனாதனக் கொள்கைகளை செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். சாதியக் கட்டமைப்பு வேண்டும் என்று விரும்புகிறவர்கள்தான் சனா தனத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால் நாம் சாதியக் கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என விரும்புபவர்கள். பெய ருக்கு பின்னால் சாதியை குறிப்பிடு பவர்கள் சனாதனத்தை, வர்ணாஸ்ர மத்தை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம். கருத்தியல் ரீதியாக, சித்தாந்த  ரீதியாக சனாதனத்தை, வர்ணாஸ்ர மத்தை எதிர்கொள்ளும் கட்சியாக, சவால் விடும் அமைப்பாக இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி அமைப்புகளும் தான். சாதியக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் சாதி மறுப்பா ளர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். சாவர்க்கர் வாரிசுகளுக் கும், பகத்சிங் வாரிசுகளுக்கும் நடை பெறும் போராட்டம். சனாதனத்துக்கும், சமத்துவத்துக்குமான போராட்டம். இந்த போராட்டத்தில் நாம் அனை வரும் ஒன்றிணைந்து சமூக சமத்துவம் படைக்கும் போராட்டத்தை முன்னெடுப் போம் எனக் கேட்டுக் கொண்டார்.

சாதி ஒழிப்போடு சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் அவசியம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புத்  தலைவர் பி.சம்பத் பேசுகை யில், நாடு சுதந்திரம் அடைந்து 75  ஆண்டுகள் ஆகியும் சாதி ஒழிய வில்லை. சாதி ஒழியாமல் சாதிய அடக்கு முறை, தீண்டாமை எப்படி ஒழியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.  சாதி  ஒழிப்புக்கான போராட்டத்தை வலுவாக முன்னெடுக்க வேண்டியது அவசிய மாகும். சாதி ஒழிப்பில் அம்பேத்கர்,  இட துசாரி தலைவர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பு மகத்தானது. இவர் களெல்லாம் போராடியும் சாதி ஒழியா மல் இருக்கலாம். ஆனால் இவர்கள்  போராடவில்லை என்றால் இன்றைக்கு  இந்தியாவில் இருக்கக் கூடிய பிற் படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்  கூட முன்னேறியிருக்க முடியாது என்றார். உழைப்பாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாக தலித் மக்கள் உள்ளனர். தலித் மக்களும், பிற்படுத்தப் பட்ட மக்களும் ஏழைகளாக இருப்பது ஆண்டவன் இட்ட கட்டளையா? இல்லை. ஆண்டவர்களும், ஆட்சியாளர் களும் வகுத்த பாதை என்பதை புரிந்து  கொள்ள வேண்டும். சாதி ஒழிய  வேண்டும் என்றால் மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே சாதி ஒழிப்புப் போராட்டத்துடன் சுரண்ட லுக்கு எதிரான போராட்டத்தையும் இணைத்து முன்னெடுக்க வேண்டும்.  கேரளாவில் இடதுசாரி ஆட்சியில் நிலச்சீர்திருத்த சட்டம் கொண்டுவரப் பட்டு தலித் உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கு இடம் பகிர்ந்தளிக்கப் பட்டது. அதன் மூலம் அந்த மக்கள்  வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற் றம் ஏற்பட்டது என்றார் சம்பத். பீகார், உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி தமிழகத்தில் கூட வன்கொடுமைகள் அதிகளவில் நடந்துள்ளன. ஆனால் கேரள மாநிலத்தில்தான் குறைந்த வன்கொடுமைகள் நடைபெற்றுள்ளன. அதற்கு காரணம் நிலப் பகிர்வுதான். எனவே இடதுசாரி கட்சிகள் பலமடை யும் போதுதான் சாதிய வன்முறை ஒழியும் என்றார்.

இறையூரில் சிபிஎம் தலையீட்டால் வெளிச்சத்திற்கு வந்த தீண்டாமை 

கு.ஜக்கையன் (ஆதித் தமிழர் கட்சி) பேசுகையில், சாதி இருக்கிறதா என சிலர் கேட்கிறார்கள். ஆனால் அனைத்து சமூகத்திலும் ஏதாவது ஒரு வகையில் சாதிய வன்முறை நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. இந்துக்கள் பெரும்பான்மை என்று கூறும் இந்து மதம் என்ற கட்டமைப்புதான்,மநு தர்மம் என்ற கட்டமைப்புதான் தீண்டா மையையும் சாதியையும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளன. எனவே அந்த  கட்டமைப்பை உடைக்காமல் மாற்றத் தை ஏற்படுத்த முடியாது என்றார். சாதி அமைப்பு சடங்குகளில் இருக்கிறது. கும்பிடும் சாமியில் இருக் கிறது. புதுக்கோட்டை இறையூரில் காவல் துறையும், ஆட்சியரும் நட வடிக்கை எடுக்கக் காரணம் அந்த தக வலை அரசுக்கும், ஊடகத்திற்கும் கொண்டு சென்றது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தான் என்பதை மறந்து விடக் கூடாது. இல்லையென்றால் அந்த பிரச்சனை வெளியே தெரிந்திருக்காது.

வல்லரசு நாட்டில் மலத்தை அகற்ற எந்திரம் இல்லை 

அள்ளக் கூடாது என்று சட்டம் இயற்றப் பட்ட பின்னரும் கூட 400 பேர் இறந்துள்ள னர்.  வல்லரசு என்று கூறிக்கொள்ளும் மோடி அரசு ஏன் மலம் அள்ளு வதற்கு நவீன கருவிகளை பயன்படுத்த வில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் மாணவர்கள் கண்டுபிடித்த கருவிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர விடாமல் தடுக்கிறது மோடி அரசு. எனவே சாதிக்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் போது, மநு தர்மத்திற்கு, சுரண்டலுக்கு எதி ராகவும் இணைந்து போராட வேண்டும்.  அனைத்து சமூக மக்களும் செங்கொடி யின் கீழ் இணைந்து நின்று போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எம்.ஊர்காவலன் (தேவேந்திர குல  வேளாளர் கூட்டமைப்பு) பேசுகை யில், சாதி, மதம் கடந்து அனைவரும்  ஓரணியில் திரண்டு போராடினால் மட்டும் தான் சாதியற்ற சமூகத்தை, சமமான சமூ கத்தை படைக்க முடியும். அதை  நோக்கிய பயணத்தை முன்னெடுப் போம் என்று கேட்டுக் கொண்டார்.  

களப்பணியாற்றியவர்களுக்கு பாராட்டு 

இந்த நிகழ்ச்சியில் களப் பணி யாற்றியவர்களுக்கு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, க.சுவா மிநாதன் (இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்), கே.திருட்செல்வன் (சிஐடியு), வாலண்டினா, பி.சுகந்தி (மாதர் சங்கம்), கார்த்திக், சிங்காரவேலன் (வாலிபர் சங்கம்), நிருபன் சக்கரவர்த்தி, அர விந்த்சாமி (மாணவர் சங்கம்), சி.பி.எம். மாநிலக் குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன், வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.