tamilnadu

img

கேரள கோவிட் நிவாரண நிதி : 2 மாதங்களில் வரவு ரூ .384.69 கோடி- செலவு ரூ .506.32 கோடி

திருவனந்தபுரம், மே 29-         கேரள கோவிட் கால முதல்வர் நிவாரண நிதியாக 2 மாதங்களில் ரூ 384.69 கோடி வந்துள்ளது. கோவிட்கால நிவாரணமாக ரூ .506.32 கோடி வழங்கப்பட்டுள்ளது.     இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட் -19 நிவாரணப் பணிகளுக்கான முதலமைச்சரின் நிவாரண நிதிக்கென தனி கணக்கு  2020 மார்ச் 27இல் துவக்கப்பட்டது. இந்த கணக்கில் மே 27 வரையிலான இரண்டு மாதங்களில் பெறப்பட்ட தொகை ரூ .384.69 கோடி. இதே கால அளவில் இந்த நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.506.32 கோடி செலவிடப்பட்டுள்ளது.     உணவுப்பொருள் விநியோகத் துறைக்கு 350 கோடி ரூபாயும், வெளிநாடுவாழ் மலையாளிகளின் தேவைகளுக்காக நோர்க்காவுக்கு ரூ .8.5 கோடியும், நிதி உதவி பெறாத குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க கூட்டுறவுத் துறைக்கு ரூ.147.82 கோடியும் இதுவரை அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.