கொச்சி இந்தியாவிலேயே முதன் முறையாக டிஜிட்டல் நீதி மன்றங்கள் கொச்சியில் அமைக்கப்பட்டுள்ளன. இதனை முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்துள்ளார். “தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும்; அந்த வகையில், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றச் செயல்கள் நடக்கும் காலத்தில் இது மிகவும் முக்கியமானது!” என்று பினராயி தெரிவித்துள்ளார். எஸ்சி-எஸ்டி வன்கொடுமைகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்! பட்டியல் சாதி – பழங்குடியி னருக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசா ரிக்க எர்ணாகுளத்தில் சிறப்பு நீதி மன்றத்தையும், ஒழுங்குபடுத்தப் படாத வைப்புத் திட்டத் தடைச் சட் டத்தின் (BUDS) வழக்குகளை விசாரிக்க ஆலப்புழாவில் சிறப்பு நீதிமன்றத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். அப்போது, “பட்டியல் சாதிகள் - பழங்குடியினர் மீதான வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக் குகளை விசாரிக்க எர்ணாகுளத் தில் சிறப்பு நீதிமன்றம் துவக்கப் பட்டது. அது மட்டுமல்லாமல் நெடு மங்காடு, கொட்டாரக்கரா, மன் னார்க்காடு, மாஞ்சேரி மற்றும் மானந்தவாடி ஆகிய இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் துவக்கப் பட்டுள்ளன. இது விளிம்புநிலை சமூ கத்தை பாதுகாப்பதில் கேரளத்தின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டு கிறது” என்று கூறிய முதல்வர் பின ராயி விஜயன், சட்டவிரோத முத லீடுகளைக் கட்டுப்படுத்தவும், முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் பட்ஸ் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்க ஆலப்புழா வில் சிறப்பு நீதிமன்றம் தொடங்கப் பட்டதாகவும் முதல்வர் தெரி வித்தார்.
தொழிற் தகராறுகளுக்கு டிஜிட்டல் நீதிமன்றம்!
கொல்லத்தில் பேச்சுவார்த் தைக்கான (தொழிற் தகராறு) சட்டத் தின் கீழ் விசாரணை வழக்குக ளுக்கான டிஜிட்டல் நீதிமன்ற, மாதிரி டிஜிட்டல் நீதிமன்ற அறை, டிஜிட்டல் நூலகம், சட்ட ஆராய்ச்சி மையம், நீதித்துறை அகாடமியில் கற்றல் மேலாண்மை அமைப்பு, ஆன்லைன் தகராறு தீர்வு அமைப்பு (WeSolve) மற்றும் நீதி மன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ளும் இலக்குடன் கூடிய டிஜிட் டல் மாவட்ட நீதிமன்றங்களை உச்ச நீதிமன்ற நீதிபதி பூஷன் ராம கிருஷ்ண கவாய் திறந்து வைத்தார். சிசிடிவி கண்காணிப்பு பிரிவை நிதி யமைச்சர் கே.என். பாலகோபால் திறந்து வைத்தார். பாதுகாப்பு மற்றும் தங்குமிடங்களை அமைச் சர் பி. ராஜீ்வ் திறந்து வைத்தார். விழாவுக்கு உயர் நீதிமன்ற தற் காலிகத் தலைமை நீதிபதி முகமது முஷ்டாக் தலைமை வகித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி சி.டி. ரவிக்குமார், உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி. ராஜா விஜயராகவன், ஏ.கே. ஜெய சங்கரன் நம்பியார், அட்வகேட் ஜெனரல் கே. கோபாலகிருஷ்ண குருப், கேரள பார் கவுன்சில் தலை வர் டி.எஸ். அஜித், இன்போசிஸ் தலைவர் நந்தன் நீலகேணி ஆகியோர் பேசினர்.