tamilnadu

img

தமிழ்நாடு முதல்வருக்கு கேரள முதல்வர் அழைப்பு

சென்னை, மார்ச் 22- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும்  என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பின ராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை, கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி  செரியன் புதனன்று (மார்ச் 22) நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கடிதத்தில் கூறியிருப்ப தாவது, “சமூக நீதிக்காகவும், தீண்டா மைக்கு எதிராகவும் கேரளத்தில் நடை பெற்ற மிக முக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டமாகும். இங்குள்ள பிரசித்திப்பெற்ற மகாதேவர் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் அன்றைக்கு தாழ்த்தப் பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இக்கொடுமைகளுக்கு எதிராக 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம்  தேதி நடைபெற்ற வைக்கம் போராட்டத் தில் டி.கெ.மாதவன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், கே. பி. கேசவ மேனன் போன்றோர் முன்னி ன்று செயல்பட்டனர்.

மகாத்மா காந்தி இப்பகுதிக்கு நேரடியாக வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும், மறு மலர்ச்சி நாயகர் தந்தைப் பெரி யார் வைக்கம் போராட்டத்தை முன்னி ன்று நடத்தியதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இதன்காரணமாக, தந்தைப் பெரியார், வைக்கம் வீரர் என அறியப்பட்டதும், வைக்கத்தில் அவரது நினைவாக சிலை எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அமைதியான முறையில் 603 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 23  ஆம் தேதி வெற்றிகரமாக முடிவுற் றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போரா ட்டத்தின் நூற்றாண்டு விழாவினை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 603 நாட்கள் மிகச்சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. வைக்கம் போராட்ட வெற்றிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால், கேரள, தமிழ்நாடு மாநில முதல்வர்கள் இணைந்து வைக்கத்திலுள்ள தந்தைப்பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, வைக்கம் போராட்ட வீரர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி, நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

;