tamilnadu

பஞ்சாப்பில் கெஜ்ரிவால் போட்டியில்லை ஆம் ஆத்மி அறிவிப்பு

பஞ்சாப்பில் கெஜ்ரிவால் போட்டியில்லை
ஆம் ஆத்மி அறிவிப்பு

தில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 தொகுதி களில் மட்டுமே வென்று பாஜகவிடம் ஆட்சியை இழந்தது. குறிப்பாக ஆம்  ஆத்மி தலைவரும், முன்னாள் முதலமை ச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  இந்நிலையில், தில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வீழ்த்தியதை சாதக மாக பயன்படுத்தி, பஞ்சாப்பிலும் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை குதிரைப் பேரம் மூலம் கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. பாஜகவின் “ஆபரேசன் லோட்டஸ்” திட்டத்தை வீழ்த்த பஞ்சாப்பில் காலியாக  உள்ள லூதியானா மேற்கு சட்டமன்றத் தொகு திக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிடவுள்ளதாகவும், அவர் முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சராக பதவியேற்கலாம் என செய்திகள் வெளியாகின.  இத்தகைய சூழலில் லூதியானா மேற்கு இடைத்தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிட மாட்டார் என்றும்,  மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோரா போட்டியிடுவார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஹைதராபாத்

அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம்

அரசு அறிவிப்பு தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அப் போது ஆட்சி செய்த பிஆர்எஸ் கட்சி முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில், தற்போது தேசிய  கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழி பிரச்சனை தீவிரமடைந்துள்ள சூழலில், தெலுங்கு மொழிப் பாடத்தைக் கட்டா யமாக்கி அம்மாநில கல்வித்துறை உத்தர விட்டுள்ளது.  வருகின்ற 2025-26 கல்வியாண்டு முதல் தெலுங்கானா மாநிலத்தில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்பட அனைத்து பாடத்திட்டங்களில் இயங்கும் பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.