tamilnadu

img

இலக்கை அடைகாத்து வை..! - சி.கணேசன், தேனி

தேசம் அடிமையாகிவிட்டதென எல்லோரும் செத்துப்போயிருந்தால்
தேசவிடுதலை சாத்தியமாயிருக்காது …
சமூகம் அடிமைத்தனத்தால் அனைவரும் மாண்டுபோயிருந்தால்
சமூகவிடுதலையும் சாத்தியமாயிருக்காது …

ஒவ்வொரு விடுதலையின் பின்னும்
ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் வென்றிருப்பதே வரலாறு …

டாக்டராவதும் எஞ்சினியராவதும் வாழ்வதற்கான தொழில் மட்டுமே!
அதுவே வாழ்க்கையல்ல…

கொட்டிக்கிறக்கிறது வாய்ப்புகள் உன் திறமைகளை வாங்கிக்கொள்ள
காத்துக்கிடக்கிறது துறைகள் உன் சாதனைகளை ஏந்திக்கொள்ள
எடிசனும்…நியூட்டனும் கூட டாக்டரில்லை…

காரல்மார்க்ஸும் காந்தியும் கூட டாக்டரில்லை
பாரதியும் பாரதிதாசனும்,
பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும் கூட டாக்டரில்லை
நீதிபதிகளும் கலெக்டர்களும்கூட
டாக்டர் கனவைத் தொலைத்தவர்கள்தான் …

டாக்டர் கனவை தொலைத்த எவ்வளவோ ஆசிரியர்கள் எத்தனையோ
டாக்டர்களை உருவாக்கியிருக்கிறார்கள்
உன் திறமையையும் அறிவையும் எதிர்பார்த்து காத்துக்கிடக்குது உலகம் …

உன் டாக்டர் கனவுக்காக உயிரைத் தொலைக்க துணிந்த நீ
உன் உயிரையும் இலக்கையும் அடைகாத்து வை
உன் அடுத்த தலைமுறையின் கனவுக்காவது போராட
உன் உயிரும் இலக்கும் உதவட்டும் …
எல்லா உரிமைகளும் போராட்டத்தால் வெல்லப்பட்டவையே …